நினைத்தேன் வந்தாய்: எழில் கொடுத்த புடவையால் கோபமான இந்து.. ஷாக் கொடுத்த சுடர்..!!

Ninaithen Vandhai Today's Episode Update: எழில் கொடுத்த புடவையால் கோபமான இந்து.. ஷாக் கொடுத்த சுடர் - நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோடு அப்டேட்

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 10, 2024, 11:39 AM IST
  • நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்
  • எழில் சுடருக்கு கூட வாங்கிக் கொடுப்பதை பார்த்த இந்துவும் கடுப்பாகிறாள்.
  • எழில் கொடுத்த புடவையால் கோபமான இந்து.
நினைத்தேன் வந்தாய்: எழில் கொடுத்த புடவையால் கோபமான இந்து.. ஷாக் கொடுத்த சுடர்..!! title=

Ninaithen Vandhai Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். 

 ஜீ தமிழ் தொலைக்காட்சியின் மிகவும் பிரபலமான இந்த நினைத்தேன் வந்தாய் சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் சுடர் மனோகரியை கூட்டி சென்று புடவை வாங்க அவள் தனக்கென்று ஆசையாக புடவையை எடுக்க கடைசியில் அதை சுடருக்கு கொடுக்க மனோகரி அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது எழில் சுடருக்கு கூட வாங்கிக் கொடுப்பதை பார்த்த இந்துவும் கடுப்பாகிறாள். தீபாவிடம் பேசி கிளம்பி கொண்டிருக்க திடீரென இந்து அங்கு வந்து விடுகிறாள். என்னக்கா கோவமா இருக்கீங்களா என்று கேட்டு புடவை எடுத்து நீட்டுகிறாள். இந்தப் புடவை உங்களுக்குத்தான் சரணம் நீங்கதான் எல்லாத்துக்கும் காரணம் என்று சொல்ல இந்து புடவை வாங்கினால் தான் ஒரு பேய் என்பது தெரிந்து விடும் என்பதால் அதை நீயே வச்சுக்கோ எல்லாத்துக்கும் நீயும் தான் காரணம் என்று சொல்கிறாள். 

மேலும் படிக்க | நடிகர் விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு


 
இதையடுத்து சுடரை பார்க்க அவரது அப்பா வீட்டுக்கு வர இந்து அவரைப் பார்க்க அவரது கண்ணுக்கு இந்து தெரிவது போலவே தோன்றுகிறது. இது எனக்கு சுடர் வெளியே வர அப்பா சுடரிடம் பேசிக் கொண்டிருக்க குழந்தைகள் வெளியே வந்து தாத்தா நாங்க உங்ககிட்ட பேசியிருக்கோம் என்று சுடரை காப்பாற்றிய விஷயத்தில் சொல்ல அவர் நன்றி கூறுகிறார். 

கனகவல்லி நீங்கள் போய் விளையாடுங்க அவங்க தனியா பேசட்டும் என்று குழந்தைகளை அனுப்பி விட அப்பா சுடரிடம் உங்க அக்கா சென்னைல தான் இருக்கா அந்த லேடி மீட் பண்ண வர்றதா சொல்லி இருக்காங்க என்று சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | Santhanam : சந்தானத்தின் மனைவியை பார்த்துள்ளீர்களா? வைரல் புகைப்படம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

Trending News