செந்தில் செய்த வேலை, ஸ்டேஷனலில் இருந்து அமுதா கொடுத்த அதிர்ச்சி

Amudhavum Annalakshmiyum July 31 Update:செந்தில் செய்த வேலை, ஸ்டேஷனலில் இருந்து அமுதா கொடுத்த அதிர்ச்சி - அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 31, 2023, 02:15 PM IST
  • அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது?
  • அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
  • இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
செந்தில் செய்த வேலை, ஸ்டேஷனலில் இருந்து அமுதா கொடுத்த அதிர்ச்சி title=

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று அமுதா போலீஸ் ஸ்டேஷனலில் இருக்கும் விஷயம் செந்திலுக்கு தெரிய வர அவன் அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, அனைவரும் அமுதாவுக்காக கோயிலில் காத்திருக்க அமுதா போலீஸ் ஸ்டேஷனில் அமர்ந்திருக்க வெளியே செந்தில் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்க மாணிக்கம் செந்திலுக்கு போன் செய்து மாப்பிள்ளை என்னடா ஆச்சு என கேக்க, அமுதாவை விட மாட்டேங்குறாங்க என சொல்ல, அமுதா இங்க வரலைன்னா உங்க அம்மா அவ்வளவு தான் ஆட்டத்தை கலைச்சிருவா என சொல்ல, நான் எப்படியாவது கூட்டிட்டு வர்றேன் மாமா என சொல்லி போனை வைக்கிறான். மறுபக்கம் பூஜைக்கான ஏற்பாடுகள் நடக்கிறது.

மேலும் படிக்க | சாலை விபத்தில் சிக்கி இளம் நடிகர் மரணம்..! சோகத்தில் ரசிகர்கள்..!

அடுத்து செந்தில் என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்க, ஒரு தலைவரை வரவேற்பதற்காக ஜீப்பில் வெடிகளை வைத்திருப்பதை செந்தில் பார்க்கிறான். உடனே செந்தில் யோசித்தவாறே யாரும் பார்க்காதபடி வெடிகளுக்கு தீ வைத்து விடுகிறான். வெடி வெடித்து சிதற, போலீஸ் ஸ்டேஷன் உள்ளே இருந்த போலீஸ்காரர்கள் அனைவரும் வெளியே ஓடிவருகின்றனர். 

இது தான் சரியான சமயம் என செந்தில் எண்ணியபடி உள்ளே சென்று அமுதாவை வா போயிடலாம் என கூப்பிட அமுதா எல்லாம் சட்டப்படி தான் நடக்கனும் நான் வர மாட்டேன் என சொல்ல, செந்தில் போலீஸ் உன்னை விடவே மாட்டாங்க, அம்மா வேற உனக்காக அங்க காத்திருக்காங்க என சொல்ல, அமுதா முடியாது என மறுக்க, செந்தில் கோபத்துடன் அங்கிருந்து வெளியேறுகிறான். 

பிறகு அன்னம் மாணிக்கத்திடம் அமுதா எங்கே என கேக்க, மாணிக்கம் வந்துருவா என சமாளிக்க அன்னம் பொழுது சாயுறதுக்கு முன்னால விளக்கு ஏத்தனும் சொல்கிறாள். அமுதா கண்ணீருடன் கதிரேசனை நினைத்து பீல் பண்ணியபடி நேரத்தை பார்த்து கண்ணை மூடியபடி மாமா நான் படிக்கனும், வீட்டுக்கு நல்ல மருமகளா இருக்கனும் இதை எல்லாம் தாண்டி உங்களுக்கு செய்ய வேண்டிய விஷயத்தை நான் செய்ய முடியாம போயிருமேன்னு எனக்கு பயமா இருக்கு, எப்பவும் போல நீங்க தான் எனக்கு துணை நிக்கனும் என வருந்துகிறாள். 

மேலும் இங்கே பாட்டி மாணிக்கத்திடம் அமுதா வர்றதுக்கு குடுத்த நேரம் முடிஞ்சு போச்சு, அன்னம் நீ விளக்கை ஏத்து என சொல்கிறார். அன்னம் சமாதியில் விளக்கு ஏற்ற வேகமாக காற்று அடிக்க அன்னம் தீப்பெட்டியை கொளுத்த தீக்குச்சி முடிந்து போகிறது. வடிவேலும் அன்னம் பரமு மூவரும் என்ன செய்வதென்று தெரியாமல் பார்க்க, வடிவேலு தீப்பந்தத்தை எடுத்து வருகிறான். பிறகு தீப்பந்தத்தை வைத்து விளக்கு ஏற்றப் போக பாட்டி கீழ போடுடா, என் பையன் அமுதா இல்லாம இந்த காரியத்தை செய்ய விருப்பப்படலைன்னு நினைக்கிறேன், அமுதா வரட்டும் என சொல்ல, அன்னம் ஏதோ சொல்ல வர பாட்டி அன்னம் உனக்கு இன்னுமா புரியலை அமுதா வரட்டும் என சொல்கிறார்.

இங்கே மாணவனின் அப்பா இன்ஸ்பெக்டரிடம் பிரஸ்காரங்க எல்லாரும் வந்துட்டாங்க பிரஸ் மட்டும் பத்தாது கஞ்சா அது இதுன்னு ஏதாவது ஒண்ணை சொல்லி கேசை ஸ்ட்ராங்கய்யா என சொல்ல, நான் பார்த்துக்குறேன் என சொல்லி விட்டு பிரஸ்காரர்களிடம் இன்னைக்கு முக்கியமான கேசோட டீடெயில் சொல்லப் போறேன் வெயிட் பண்ணுங்க என சொல்கிறார். நடப்பது அனைத்தையும் கைதிகள் பார்த்துக் பார்த்து கொண்டிருக்கின்றனர். 

கைதிகள் அமுதாவின் நிலைமையை பார்த்து இன்ஸ்பெக்டரிடம் படிக்கிற பிள்ளையை எதுக்கும்மா உள்ள வச்சிருக்கீங்க , நாங்க நெறைய தடவை தப்பு பண்ணிட்டு உள்ள வருவோம், சில நேரம் தப்பு பண்ணாம எங்க மேல கேஸ் போட்டு உள்ள தள்ளுவீங்க, எங்களுக்கு பழகிப் போச்சு, பாவம் அந்த பொண்ணு எந்த தப்பும் பண்ணுன மாதிரி தெரியலம்மா என சொல்ல, இன்ஸ்பெக்டர் கோபமாகி ஏண்டா எனக்கு புத்திமதி சொல்றீங்களா, இருக்குற எல்லா கேசையும் உங்க மேல போட்டுருவேன் என கோபமாக சொல்ல, கைதிகள் துப்பாக்கியை எடுத்து INSPECTOR கழுத்தில் வைக்க அமுதா புரியாமல் பார்க்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது

அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.

மேலும் படிக்க | நடிகர் பிரபாஸின் பேஸ்புக் பக்கம் ஹேக்..! ஷாக்கில் ரசிகர்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News