கார்த்திகை தீபம்: ஆனந்துக்கு கல்யாணம்... குடும்பத்துக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..!!

ஆனந்துக்கு கல்யாணம்.. நாள் குறிக்க வரும் ரியா, அபிராமி குடும்பத்துக்கு காத்திருக்கும் அதிர்ச்சி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 27, 2024, 02:33 PM IST
  • கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
  • அருண் அபிராமியை சமாதானப்படுத்தி சாப்பிட வைக்கிறான்.
  • கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
கார்த்திகை தீபம்: ஆனந்துக்கு கல்யாணம்... குடும்பத்துக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..!! title=

Zee Tamil Karthigai Deepam TV Serial Today's Episode: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அருணுக்கும் கார்த்திக்கும் இடையே பிரச்சனை வெடித்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, அருண் வீட்டை விட்டு வெளியேறுவதாக சொல்ல கார்த்திக் ஒரு வாரத்தில் இதை பண்ணது யாருனு கண்டுபிடிக்கிறேன் என்று அருணை தடுத்து நிறுத்துகிறான், இதனை தொடர்ந்து ஐஸ்வர்யாவும் ராஜேஸ்வரியும் நாம பிளான் பண்ண மாதிரியே நடந்துடுச்சி, இதை வச்சே அந்த தீபாவை வெளியே துரத்தணும் என்று பிளான் போடுகின்றனர். 

அதனை தொடர்ந்து தீபா மூலமாக மைதிலிக்கு விஷயம் தெரிய வருகிறது, உடனே அவள் ஐஸ்வர்யாவுக்கு போன் போட்டு ராஜேஸ்வரியிடம் போனை கொடுக்க சொல்லி அவளை கண்டபடி திட்டி போனை வைக்கிறாள். கார்த்திக் அருணை சென்று சந்தித்து பிரச்சனையால் அம்மா சாப்பிடாமல் இருக்காங்க என்று சொல்ல அருண் அபிராமியை சமாதானப்படுத்தி சாப்பிட வைக்கிறான். 

மேலும் படிக்க | வெறும் 5 கோடி பட்ஜெட்! வசூலோ 50 கோடிகள்! சாதனை படைக்கும் பிரேமலு!

மறுப்பக்கம் ஆனந்த் ரியா வீட்டில் இருக்க திடீரென யாரோ கதவை தட்டுகின்றனர். ஆனந்த் கதவை திறக்க போலீஸ் நின்று கொண்டிருக்கிறது, என்ன விஷயம் என்று விசாரிக்க பக்கத்து வீட்டில் ஒரு திருட்டு சம்பவம் நடந்திருக்கு, அதற்காக இன்வெஸ்டிகேஷன் செய்ய வந்திருக்கோம் என்று சொல்லி நீங்க யார் என்று விசாரிக்க ஆனந்த் இவங்க கணவரை விவாகரத்து பண்ணவங்க, நான் இவங்க ப்ரண்ட். பார்த்துட்டு போக வந்ததாக சொல்ல போலீஸ் ரியாவை ஒரு மாதிரி பார்த்து விட்டு கிளம்பி செல்கின்றனர். 

மேலும் படிக்க | ஹாய் நன்னா படத்திற்கு பிறகு நானி நடிக்கும் புதிய படம்! இயக்குனர் யார் தெரியுமா?

அதன் பிறகு ரியா அவங்க பார்வையே சரியில்ல, இதுக்காக தான் நாம கல்யாணம் பண்ணிக்கலாம் என்று சொன்னேன் என்று சொல்லி பீல் பண்ண ஆனந்த் சீக்கிரம் பண்ணிக்கலாம் என்று சொல்கிறான். பிறகு ரியா வெளியே வந்து அந்த போலீசுக்கு பணத்தை கொடுத்து நன்றி சொல்ல இது அனைத்தும் அவளோட செட்டப் என்று தெரிய வருகிறது. 

இதனை தொடர்ந்து தீபாவும் அபிராமியும் கோவிலில் விளக்கு போட வருகின்றனர், இந்த நேரம் பார்த்து ரியாவும் அதே கோவிலுக்கு கல்யாணத்துக்கு நாள் குறிக்க வருகிறாள். இப்படியான நிலையில அடுத்து நடக்க போவது என்ன? இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்வார்களா? என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | கதாநாயகனாக அறிமுகமாகும் தங்கர் பச்சானின் மகன் விஜித்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News