முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நன்றி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இலங்கை காங்கிரஸ் கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 8, 2022, 04:52 PM IST
  • இலங்கையில் பொருளாதார நெருக்கடி
  • முதலமைச்சர் ஸ்டாலினுக்கு செந்தில் தொண்டமான் நன்றி
  • இலங்கைக்கு உதவும் தமிழ்நாடு
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நன்றி title=

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் வீதியில் இறங்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே, பிரதமர் ராஜபக்‌ஷே உள்ளிட்டோர்தான் காரணம். எனவே அவர்கள் அனைவரும் உடனடியாக பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சியினரும் வலியுறுத்துகின்றனர்.

சூழல் இப்படி இருக்க, இலங்கைக்கு இதுவரை இரண்டு லட்சத்து 70,000 மெட்ரிக் டன் எரிபொருளை இந்தியா வழங்கி உதவி செய்துள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு சார்பிலும் உதவிகள் செய்யப்படவிருக்கின்றன.

SriLankan Crisis

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இலங்கை தொழிலாளர் கட்சி நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வழங்க முன்வந்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசிகள் அதிகரித்துள்ளன. இதனால், பொதுமக்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

Senthil Thondaman

இதனைக் கருத்திற்கொண்டு. மலையக மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளை வழங்குவது தொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்  சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஊடாகத் தமிழக முதலமைச்சர், உரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.

அந்த வகையில், இலங்கையில் வசிக்கும் குறிப்பாக மலையகத்திலும், வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், தலைநகர் கொழும்பிலும் வாழும் தமிழர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசினால் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக அனுப்பி, அவற்றை இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகங்கள் மூலம் விநியோகிக்க உரிய ஏற்பாடுகளைச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும் படிக்க | பணக்காரனா நீ? வரி கட்டு! செல்வந்தர்களுக்கு வரி விதிக்கும் இலங்கை

இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் தமிழக முதலமைச்சர் கொண்டுள்ள கரிசனைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.இவ்வாறான தருணத்தில் செய்யப்படும் உதவிகள், எம்மக்களுக்கு பாரிய பக்கபலமாக இருக்கும் என்பது உறுதி” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | Viral Video: மரண பயத்தை காட்டிட்டாங்க பரமா... ரஷ்ய வீரரை நடுங்க வைத்த உக்ரைன் ட்ரோன்...

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News