நான்கு மொழிகளில் வெளியாகிறது புருவ புயலின் ''ஒரு ஆடர் லவ்"- ரசிகர்கள் மகிழ்ச்சி!!

செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் பிரியா வாரியரின் ஒரு ஆடர் லவ் என்ற மலையாள திரைப்படமானது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் டப் செய்து வெளியிடுகிறார்கள். 

Last Updated : Apr 8, 2018, 06:11 PM IST
நான்கு மொழிகளில் வெளியாகிறது புருவ புயலின் ''ஒரு ஆடர் லவ்"- ரசிகர்கள் மகிழ்ச்சி!! title=

செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் ஒரு ஆடர் லவ் என்ற மலையாள திரைப்படமானது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் டப் செய்து வெளியாக உள்ளது.

சமிபத்தில் "ஜிமிக்கி கம்மல்" உலக அளவில் வைரலாக பரவி அனைவரது கவணத்தையும் ஈர்த்தது. அதனையடுத்து தற்போது மலையாளத்தில் தயாராகி வரும் படம் ஒரு அடார் லவ். ஓமர் லுலு இயக்கும் இந்த படம் கல்லூரி காதல் கதையில் உருவாகிறது. ரோஷன் அப்துல் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் 18 வயதான பிரியா பிரகாஷ் வாரியர் நாயகியாக அறிமுகமாகிறார்

இந்த படத்தின் டீசர் காட்சிகள் காதல் தின ஸ்பெசலாக வெளியானது. அதனை தொடர்ந்து, இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள "மணிக்கய மலரே பூவே" என்ற பாடலின் வீடியொ கிலிப் ஒன்று தற்பொது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இப்பாடல் காட்சியில் வரும் ரொமான்டிக் காட்சி தான் தற்போது பலரது வாட்ஸ் அப் ஸ்டேடஸ். 

இந்த பாடல் யூ-டியூப்பில் பார்த்து ரசித்தவர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் ரெண்டு கோடியை தாண்டிவிட்டது. இந்தப்பாடலில் பிரியா பிரகாஷ் வாரியரின் புருவம் உயர்த்தும் கண் அடிக்கும் காட்சி சமூக வளைத்ததில் மிகவும் வைரலாகி வந்தது. இதன் மூலம் ஒரே நாளில் சன்னி லியோனையே பின்னுக்குத்தள்ளியாவர் ப்ரியா பிரகாஷ் வாரியர் ஆவார்.

அவரை தற்போது இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 50 லட்சம் ரசிகர்கள் பின் தொடர்ந்து உள்ளனர். அதனை பயன்படுத்தி பிரியா வாரியார் பணம் சம்பாதிக்க துவங்கியுள்ளார்.சில நிறுவனங்கள் விளம்பரத்திற்காக பிரியாவை அனுகியுள்ளன. 

பிரியா பிரகாஷ் வாரிய ஒரு பதிவுக்கு சுமார் 8 லட்ச ருபாய் வாங்கிக்கொண்டு ப்ரியா விளம்பரம் செய்து கொடுக்கிறாராம். இதையடுத்து பிரியா பிரகாஷ் வாரியரை போன்றே பாலிவுட் நடிகைகளும் அந்த பாடலுக்கு டப்பிங் செய்து இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் பிரியா வாரியரின் ஒரு ஆடர் லவ் என்ற மலையாள திரைப்படமானது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் டப் செய்து வெளியிடுகிறார்கள்.  ஆக, ஒரு கண்ணசை காட்டி ஒரு சிறிய படத்தை நான்கு மொழிகளிலும் வெளியாகும் அளவிற்கு மெகா ஹிட் படமாக்கி விட்டார் பிரியா பிரகாஷ் வாரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News