IPL 2018: ராஜஸ்தான் அணிக்கு வெற்றி இலக்கு 152 ரன்கள்!

IPL 2018 தொடரின் 28-வது போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு 152 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத்!

Last Updated : Apr 29, 2018, 05:36 PM IST
IPL 2018: ராஜஸ்தான் அணிக்கு வெற்றி இலக்கு 152 ரன்கள்! title=

IPL 2018 தொடரின் 28-வது போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு 152 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத்!

IPL 2018 தொடரின் போட்டிகள் தற்போது விருவிருப்பாக நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் போட்டிகள் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைப்பெற்று வருகிறது.

இத்தொடரின் 28-வது போட்டியில் இன்று ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஜெய்பூர் மைதானத்தில் நடைப்பெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க வீரராக களமிறங்கிய சிகர் தவான் 6(4) ரன்களில் வெளியேற மற்றொரு வீரர் அலெக்ஸ் நிதானமாக விளையாடி 45(39) ரன்கள் குவித்தார். அணித்தலைவர் வில்லியம்ஸ் 63(43) ரன்களில் வெளியேறினார். இவர்களை அடுத்து களமிறங்கிய வீரரகள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

இந்நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

ராஜஸ்தான் அணி தரப்பில் ஆர்சர் 3 விக்கெட்டுகளையும், கிருஷ்ணப்பா கௌதம் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
 
இதனையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்குகிறது.

Trending News