SP1-77: கொரோனா வைரசின் அனைத்து வேரியண்டுகளையும் எதிர்க்கும் ஆண்டிபாடி கண்டுபிடிப்பு

Antibody To Coronaviruses: இதுவரை கண்டறியப்பட்ட அனைத்து கொரோனா வகைகளையும் நடுநிலையாக்கக்கூடிய ஆன்டிபாடியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 7, 2022, 04:23 PM IST
  • கொரோனாவுக்கு எண்ட்கார்டு போட புது தடுப்பூசி வந்தாச்சு!
  • கொடூர கொரோனா வைரஸின் அனைத்து வேரியண்டுகளுக்கும் ஒரே தடுப்பூசி
  • விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு விரைவில் புழக்கத்துக்கு வரலாம்
SP1-77: கொரோனா வைரசின் அனைத்து வேரியண்டுகளையும் எதிர்க்கும் ஆண்டிபாடி கண்டுபிடிப்பு title=

Antibody To Coronaviruses: இதுவரை கண்டறியப்பட்ட அனைத்து கொரோனா வகைகளையும் நடுநிலையாக்கக்கூடிய ஆன்டிபாடியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். COVID-19 க்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசிகள் உலகிற்கு பெரிதும் உதவியுள்ளன. இருப்பினும், கொரோனா புதிய வகையாக உருவெடுத்துக் கொண்டே சவால் விடுகிறது. கொரோனாவின் புதிய பிறழ்வுகளை எதிர்த்துப் போராட பல்வேறு பூஸ்டர் தடுப்பூசிகளின் தேவைகள் எழுந்துள்ளன.  ஆனால் இப்போது, ​​விஞ்ஞானிகள் SP1-77 எனப்படும் ஆன்டிபாடியை கண்டுபிடித்துள்ளனர், இது அறியப்பட்ட அனைத்து COVID-19 வகைகளையும் நடுநிலையாக்குகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பாஸ்டன் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் டியூக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஒரு ஆய்வின் போது அதை கண்டுபிடித்தனர். இந்த கண்டுபிடிப்புகள், சயின்ஸ் இம்யூனாலஜி என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன.

"SP1-77 ஒரு தளத்தில் ஸ்பைக் புரதத்தை பிணைக்கிறது, இது இதுவரை எந்த மாறுபாட்டிலும் மாற்றப்படவில்லை, மேலும் இது ஒரு புதிய பொறிமுறையால் இந்த மாறுபாடுகளை நடுநிலையாக்குகிறது" என்று ஆய்வு இணை ஆசிரியர் டோமாஸ் கிர்ச்சவுசென், PhD, ஒரு அறிக்கையில் தெரிவித்தார். "இந்த பண்புகள் அதன் பரந்த மற்றும் சக்திவாய்ந்த செயல்பாட்டிற்கு பங்களிக்கக்கூடும்."

எச்.ஐ.விக்கு பரந்த நடுநிலையான ஆன்டிபாடிகளைத் தேடுவதற்காக முதலில் உருவாக்கப்பட்ட பரிசோதனையை ஆராய்ச்சியாளர்கள் மாற்றியமைத்தனர். இதன் அடிப்படையில் இந்த கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடி உருவாக்கப்பட்டது, இதுவும் மாறக்கூடியது என்று கண்டுபிடிப்பாளர்கள் கூறுகின்றனர்.

எலிகளுக்கும், மனிதனைப் போன்ற நோயெதிர்ப்பு அமைப்புக உள்ளது. எனவே, நோய்க்கிருமிகளால் மனிதனுக்கு ஏற்படும் பாதிப்பு, எலிகளுக்கும் ஏற்படுவதால், மனிதர்களுக்கு கொடுக்கும் மருந்துகளை முதலில் எலிகளுக்கு கொடுத்து பரிசோதிப்பது வழக்கம் ஆகும். 

மேலும் படிக்க: கொரோனாவை ஒழிக்க வைட்டமின் சி போதுமா? 

இருப்பினும், ஆன்டிபாடி, தடுப்பூசிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும்  சோதனை மற்ற ஆன்டிபாடிகளை விட சற்று வித்தியாசமான முறையில் இருக்கும். இருப்பினும், ஆய்வு எலிகள் மீது செய்யப்பட்டது, அதனால் அது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்த ஆய்வு இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர், ஆனால் அது நம்பிக்கைக்குரியதாகத் தோன்றினால், அது "புதிய மோனோக்ளோனல் ஆன்டிபாடி தயாரிப்புகள் மற்றும் தடுப்பூசியின் அடிப்படையை உருவாக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மேலும் படிக்க: NVX-CoV2373: குழந்தைகளுக்கான Novovax தடுப்பூசிக்கு DCGI அனுமதி..!!

மேலும் படிக்க | நாட்டின் முதல் நாசி தடுப்பூசி பயன்படுத்த DCGI ஒப்புதல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News