AI CEO: சீன மெட்டாவர்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ரோபோ நியமனம்

Tang Yu AI CEO: சீனாவின் மிகப்பெரிய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயற்கை நுண்ணறிவால் இயங்கும் ரோபோ நியமிக்கப்பட்டுள்ளது. 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 8, 2022, 06:10 PM IST
  • 10 பில்லியன் டாலர் நிறுவனத்தின் சி.இ.ஓ ரோபோ
  • செயற்கை நுண்ணறிவால் இயங்கும் டாங் யூ
  • மனித உருவ ரோபோவின் தலைமைப் பண்பு
AI CEO: சீன மெட்டாவர்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ரோபோ நியமனம் title=

ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயற்கை நுண்ணறிவால் இயங்கும் ரோபோ நியமிக்கப்பட்டுள்ளது. மொபைல் போன்களுக்கான அப்ளிகேஷன்களை உருவாக்கும் மற்றும் மல்டிபிளேயர் ஆன்லைன் கேம்களை இயக்கும் நிறுவனம், நிறுவனத்தின் "செயல்பாட்டுத் திறனை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதை" நோக்கமாகக் கொண்டு, ரோபோவை தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு ஏற்கனவே உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான வேலைகளுக்கு எதிரியாக மாறி அச்சுறுத்தி வருகிறது. இப்போது, ​​ஒரு சீன மெட்டாவர்ஸ் கார்ப்பரேஷன் ஒரு ரோபோவை அதன் CEO என்று நியமித்துள்ளது, எதிர்காலத்தில் ரோபோக்களின் அவசியத்தை உணர்த்துவதாக உள்ளது.

இது பலருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினாலும், ஒரு சிறிய அச்சத்தையும் உருவாக்குகிறது. டாங் யூ (Ms Tang Yu) செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் ஒரு மெய்நிகர் மனித உருவ ரோபோ மற்றும் புஜியன் நெட்டிராகன் வெப்சாஃப்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | SP1-77: கொரோனா வைரசின் அனைத்து வேரியண்டுகளையும் எதிர்க்கும் ஆண்டிபாடி கண்டுபிடிப்பு

இதுபோன்ற நடவடிக்கைகள், "செயல்பாட்டுத் திறனை ஒரு புதிய நிலைக்கு உயர்த்தும்" என்று புஜியன் நெட்டிராகன் வெப்சாஃப்ட் நிறுவனம் நம்புகிறது.  

"AI என்பது கார்ப்பரேட் நிர்வாகத்தின் எதிர்காலம் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் மிஸ். டாங் யூவின் நியமனம், நாங்கள் எங்கள் வணிகத்தை இயக்கும் விதத்தை மாற்றியமைக்க AI இன் பயன்பாட்டை உண்மையாக ஏற்றுக்கொள்வதற்கும், இறுதியில் நமது எதிர்கால மூலோபாய வளர்ச்சிக்கு உந்துதலுக்கும் எங்கள் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது" என்று இந்த நியமனம் குறித்து NetDragon தலைவர் டெஜியன் லியு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | பூமியை அழிவில் இருந்து காக்க நாசா மேற்கொள்ளும் DART மிஷன்!

டாங் யூ கிட்டத்தட்ட $10 பில்லியன் மதிப்புள்ள நிறுவனத்தின் செயல்பாடுகளை இனிமேல் மேற்பார்வையிடும். "டாங் யூ செயல்முறை ஓட்டத்தை ஒழுங்குபடுத்தும், பணி பணிகளின் தரத்தை மேம்படுத்தும் மற்றும் செயல்பாட்டின் வேகத்தை மேம்படுத்தும். தினசரி நடவடிக்கைகளில் பகுத்தறிவு முடிவெடுப்பதை ஆதரிக்கும் நிகழ்நேர தரவு மையமாகவும் பகுப்பாய்வுக் கருவியாகவும் டாங் யூ செயல்படும். அத்துடன் மிகவும் பயனுள்ள இடர் மேலாண்மை அமைப்பை செயல்படுத்தவும் டாங் யூ உதவியாக இருக்கும்." என்று நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

இந்த ரோபோ இயற்கையாகவே மனித தொடர்பு தேவைப்படும் பணிகளையும் செய்யும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. பகுத்தறிவு முடிவுகளை எடுக்கவும் மற்றும் பயனுள்ள இடர் மேலாண்மை அமைப்புக்கும் இந்த ரோபோ பயன்படும் என்று நிறுவனம் நம்புகிறது.  

மேலும் படிக்க | இது என்னடா புதுசா இருக்கு; இரட்டை குழந்தை ஆனா இரட்டையர்கள் இல்ல

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News