Study: ஐரோப்பாவில் 2000 வருடத்தில் மிகவும் மோசமான வறட்சி, வெப்ப அலைகள்

ஐரோப்பாவில் சமீபத்திய வறட்சி மற்றும் வெப்ப அலைகள் 2,000 ஆண்டுகளில் மோசமானவை என்று ஆய்வு கூறுகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் ஐரோப்பாவை பாதித்த வெப்ப அலைகள் மற்றும் வறட்சிகள் இப்பகுதியில் 2,000 ஆண்டுகளில் இல்லாத அளவில் இல்லாத அளவில் தீவிரமானதாக இருப்பதாக ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 16, 2021, 10:25 PM IST

Trending Photos

Study: ஐரோப்பாவில் 2000 வருடத்தில் மிகவும் மோசமான வறட்சி, வெப்ப அலைகள்  title=

ஐரோப்பாவில் சமீபத்திய வறட்சி மற்றும் வெப்ப அலைகள் 2,000 ஆண்டுகளில் மோசமானவை என்று ஆய்வு கூறுகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் ஐரோப்பாவை பாதித்த வெப்ப அலைகள் மற்றும் வறட்சிகள் இப்பகுதியில் 2,000 ஆண்டுகளில் இல்லாத அளவில் இல்லாத அளவில் தீவிரமானதாக இருப்பதாக ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.

இதைக் கண்டறிய, ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் புவி வெப்பமடைதலில் ஏற்பட்ட தீவிர மாற்றங்களே இதற்கு காரணம் என்று கூறினார்கள்.

ஆய்வின்படி, இப்பகுதியில் வெப்ப அலைகளால் தொடர்ச்சியான மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான இறப்புகள், பயிர்கள் அழிவது மற்றும் காட்டுத் தீ ஏற்படுவதில் அதிகரிப்பு என மோசமான விளவுகள் ஏற்பட்டுள்ளன.

Also Read | தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் செய்யும் நடனப்புயல் பிரபுதேவா 

செக் குளோப் (CzechGlobe) மையத்தின் ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, மேலும் இந்த விளைவுகளின் அதிகரிபால் குறிப்பாக விவசாயம் மற்றும் வனத்துறைக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த மாற்றங்களுடன், வெப்ப அலைகள் மற்றும் வறட்சிகள் எதிர்காலத்தில் மிகவும் பொதுவானதாகிவிடும். கூடுதலாக, ஐரோப்பாவில் கோடைக்காலத்தின் காலநிலை கடந்த இரண்டு ஆயிரம் ஆண்டுகளில் மிகவும் வறண்டதாக மாறி வருவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  

காலநிலை மாற்றத்தால் உந்தப்பட்ட மாற்றங்கள் கண்டத்தில் காற்று சுழற்சியை மாற்ற காரணமாக அமைந்தன என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். நேச்சர் ஜியோசைன்ஸ் (nature Geoscience) இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டது மற்றும் 147 ஓக் மரங்களிலிருந்து 27,000 வளர்ச்சி வளையங்களை ஆய்வு செய்யப்பட்டன.

Also Read | இந்திய ரயில்வே தனியார்மயமாக்கப்படுமா.. பியூஷ் கோயல் கூறியது என்ன

கடந்த நூற்றாண்டில், ஆராய்ச்சியாளர்கள் பழைய கட்டிடங்களிலிருந்து மரக்கன்றுகள் மற்றும் ஓக் மரங்களை கண்டறிந்ததை குறிப்பிடுகின்றனர். இடைக்காலத்தில், ஆற்று படுகைகளில் ஓக் மரம் செழிப்பாக வளர்ந்ததை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். ரோமானிய காலத்திற்கு, மரம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டது.

மரத்தின் அடர்த்தி மற்றும் அகலத்திலிருந்து வெப்பநிலை தீர்மானிக்கப்பட்டன. மரங்களுக்கு எவ்வளவு தண்ணீர் கிடைக்கிறது என்பதை அவர்கள் சோதித்தனர், அதன் அடிப்படையில் முந்தைய வறட்சியின் காலவரிசை மற்றும் தீவிரத்தை அவர்கள் தீர்மானித்தனர்.

கடந்த சில ஆண்டுகளில் ஐரோப்பா எதிர்கொண்ட வறண்ட காலநிலையும் வெப்ப அலைகளும் கடந்த 2,000 ஆண்டுகளில் இல்லாத அளவு மோசமானது.

Also Read | போதை ஏறினா ஏன் இங்கிலீஷ்ல பேசனும்? இதோ அறிவியல் காரணம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News