யாரோட ஆட்டம் சூப்பரா இருக்கு... பார்த்து சொல்லுங்க மக்களே! யானையின் க்யூட் வீடியோ!

Cute Viral Video of Elephant: யானையின் இந்த க்யூட்டான வீடியோ புத்தாண்டில் உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 1, 2023, 03:25 PM IST
  • கலைஞர், பாரம்பரிய உடையில், கோவில் வளாகத்தில் விநாயகர் பாடல் ஒன்றுக்கு நடனமாடுகிறார்.
  • யானைகள் மிகவும் கவரும் விதத்திலான தோற்றத்தைக் கொண்டுள்ளன.
  • சமூக ஊடகத்தில் வைரலாகும் யானை வீடியோ
யாரோட ஆட்டம் சூப்பரா இருக்கு... பார்த்து சொல்லுங்க மக்களே! யானையின் க்யூட் வீடியோ! title=

யானைகள், குரங்குகள் மற்றும் டால்பின்கள் போன்றவை மற்ற விலங்குகளை போல அன்றி, விதிவிலக்காக புத்திசாலித்தனமான உயிரினங்கள். யானைகளும் நம்மைப் போலவே எண்ணங்கள், ஆழமான உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை அனுபவிக்கும் திறன் கொண்டவை. யானைகளைப் பார்ப்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தான். அதிலும் ஒரு இடத்தில் நிற்கமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருக்கும் குட்டி யானைகள் என்ன செய்தாலும் அவை ரசிக்கத் தகுந்ததாகவே இருக்கும். 

இந்நிலையில், இணையத்தில் சுவாரஸ்யமான வீடியோக்கள் மற்றும் தகவல்களை அவ்வப்போது திடர்ந்து பகிர்ந்து கொள்ளும் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தற்போது, கர்நாடகாவில் உள்ள ஒரு கோவிலில் உள்ள யானையின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். திரு மகேந்திரா ட்விட்டரில் பதிவேற்றிய வீடியோவில், ஒரு கலைஞர், பாரம்பரிய உடையில், கோவில் வளாகத்தில் விநாயகர் பாடல் ஒன்றுக்கு நடனமாடுவதையும், யானை அங்கு நிற்பதையும் காணலாம். நடனக் கலைஞர் யானையை நோக்கித் திரும்பி, அதன் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காகத் தன் கைகளை  குவித்து வணங்கும் போது, யானை மெதுவாகத் தன் தும்பிக்கையைத் தன் தலையில் வைத்து ஆசீர்வதிக்கிறது. பின்னர் வீடியோவில், யானை நடன கலைஞர் செய்வதை இமிடேட் செய்து, நடனக் கலைஞர்  நடனமாடும் போது தலையை ஆட்டுவதைக் காணலாம்.

மஹிந்திரா குழுமத் தலைவர் பதிவிட்ட இந்த வீடியோ கர்நாடகாவில் உள்ள ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கோயிலில் இருந்து எடுக்கப்பட்டது. “ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கோவில், கட்டீல், கர்நாடகா. அற்புதம். மேலும் மகிழ்ச்சியான புத்தாண்டிற்காக கோயில் யானை நம் அனைவருக்கும் ஒரு ஆசீர்வாதத்தை அளிக்கிறது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

வைரலாகும் வீடியோவைக் கீழே காணலாம்:

 

 

மேலும் படிக்க | கொஞ்சம் விட்டிருந்தா சோலி முடிஞ்சிருக்கும், மலைபாம்புக்கு பல்பு: வீடியோ வைரல்

ஆனந்த மகிந்திரா பகிர்ந்த இந்த வீடியோ மிகப் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இது குறித்து பல வகைகளில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். "யானைகள் மிகவும் கவரும் விதத்திலான தோற்றத்தைக் கொண்டுள்ள. உயர்ந்த பண்புகளைக் கொண்டுள்ளது. அது உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்தும் திறன் கொண்டவை" என்று ஒரு பயனர் குறிப்பிட்டுள்ளார். யானையின் இந்த க்யூட்டான வீடியோ புத்தாண்டில் உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.

மேலும் படிக்க | 'மண்ணுல விளையாடாதனா கேட்டயா’: ஷாம்பூ போட்டு பாம்பை குளிப்பாட்டும் நபர், வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News