நடுரோட்டில் பெண் செய்த அட்டகாசம்.. மிரண்டு போன மக்கள், வைரல் வீடியோ

Shocking Viral Video: தற்போது வெளியாகியுள்ள வீடியோ மிகவும் வித்தியாசமாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது. இதில் ஒரு பெண் நடுரோட்டில் செய்யும் செயல்களை காண முடிகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 1, 2023, 01:19 PM IST
  • காதலில் கிடைத்த ஏமாற்றத்தால் அடைந்த விரக்தி காரணமாக பெண் இவ்வாறு செய்ததாக கூறப்படுகின்றது.
  • ஆனால், இதில் எவ்வளவு உண்மை உள்ளது என்பது தெரியவில்லை.
  • இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தின் குவாலியரில் நடந்ததாக கூறப்படுகிறது.
நடுரோட்டில் பெண் செய்த அட்டகாசம்.. மிரண்டு போன மக்கள், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 

 சமூக ஊடகங்களில் எந்த வீடியோ நெட்டிசன்களுக்கு பிடித்து வைரல் ஆகும், எது காணாமல் போகும் என்பதை கணிப்பது மிகவும் கடினம். சில நேரங்களில் சிலர் குடிபோதையில் ரகளைகளை செய்வதை நாம் பல வீடியோக்களில் பார்த்துள்ளோம். சில நேரம் விதிகளை மீறி பலர் பல வித்தைகளையும் காட்டுவதுண்டு. 

ஆனால் தற்போது வெளியாகியுள்ள வீடியோ மிகவும் வித்தியாசமாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது. இதில் ஒரு பெண் நடுரோட்டில் செய்யும் செயல்களை காண முடிகின்றது. காதலில் கிடைத்த ஏமாற்றத்தால் அடைந்த விரக்தி காரணமாக அவர் இவ்வாறு செய்ததாக கூறப்படுகின்றது. ஆனால், இதில் எவ்வளவு உண்மை உள்ளது என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தின் குவாலியரில் நடந்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | Viral Video: பானை செய்யும் பூனை... குயவனாய் மாறிய க்யூட் பூனையை ரசிக்கும் நெட்டிசன்கள்!

நடுரோட்டில் அட்டகாசம் செய்த பெண்ணின் வீடியோவை இங்கே காணலாம்:

வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு பெண் சாலையில் அங்கும் இங்கும் சுற்றித் திரிவதைக் காண முடிகின்றது. சாலையில் செல்லும் மக்களை எல்லாம் அவர் பாடாய் படுத்துகிறார். கார் மீது ஏறுகிறார், ஒருவரின் ஸ்கூட்டரை பிடுங்கிக்கொள்கிறார், சாலை தடுப்புகளை கீழே தள்ளி விடுகிறார். பல பெண்கள் அவரை அங்கிருந்து அழைத்துச்செல்ல முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர் யாருக்கும் அடங்குவதாகத் தெரியவில்லை. 

பெண்ணை கட்டுப்படுத்திய போலீசார்

இறுதியில் காவல்துறையும் அந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது. அவர்களுடன் சேர்ந்து பலர் அந்த பெண்ணுக்கு எடுத்துச்சொல்லி புரிய வைக்கிறார்கள். இந்த வீடியோவை @kmrvikash11 என்ற ட்விட்டர் பயனர் பகிர்ந்துள்ளார். இதை பகிர்ந்த அந்த பயனர், "காதலில் கிடைத்த தோல்வியால் பெண் செய்த கலாட்டா.. இது குவாலியரின் பூல் பாக் சந்திப்பில் நடந்த சம்பவம்" என்று எழுதியுள்ளார். இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

மேலும் படிக்க | மணமேடையில் தீ: சூப்பரா உதவிய அண்ணன், சும்மாவே நின்ற மாப்பிள்ளை, வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News