Viral News: 'விவாகரத்திற்கு' கிராண்ட் பார்டி கொடுத்த வினோத பெண்

நாம் திருமணத்திற்கான பார்டி குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், விவாகரத்தை பார்டி கொடுத்து கொண்டாடிய விந்தை சம்பவம் மிகவும் வைரலாகியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 23, 2021, 09:38 PM IST
Viral News: 'விவாகரத்திற்கு' கிராண்ட் பார்டி கொடுத்த வினோத பெண் title=

லண்டன்: நாம் திருமணத்திற்கான பார்டி குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், விவாகரத்தை பார்டி கொடுத்து கொண்டாடிய விந்தை சம்பவம் மிகவும் வைரலாகியுள்ளது.

சோனியா குப்தா தனது இங்கிலாந்து இல்லத்தில் ஒரு ஆடம்பரமான விருந்தை ஏற்பாடு செய்தார். 45 வயது பெண்மணியான் இவர் தனது 17 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததை நினைத்து, வருத்தப்படவில்லை. மாறாக இப்போது சுதந்திரமாக மகிழ்ச்சியாக உள்ளதாக கூறியுள்ளார்.  இதற்காக  ஒரு விவாகரத்து விருந்தை மிக ஆடம்பரமாக வழங்கியுள்ளர்.  

இந்த விவாகரத்து வழக்கு 3 வருடங்களாக நீடித்த நிலையில், தற்போது முடிவுக்கு வந்தததில் மிகவும் நிம்மதியாக உணர்கிறார். பார்ட்டியில் அவர் மிகவும் சந்தோஷமாக வலம் வந்தது, அவர் இவ்வாளவு நாளாக எவ்வளவு மன உளைச்சலை சந்தித்திருப்பார் என்பதை நமக்கு உணர்த்துகிறது.  விவாகரத்தை கொண்டாட தனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் அழைத்து விருந்து அளித்தார்.  

விருந்தில்,  ‘finally divorced’ என்ற பொறிக்கப்பட்ட பேண்டை அணிந்து கொண்டு வலம் வந்தது பலரை ஆச்சரிய படுத்தியுள்ளது.  

 விருந்தில் அவர் கூறியவை: "நான் மிகவும் சந்தோஷமான குதூகலமான நபர் என்பதால்,  விருந்திற்கான தீ கரை பிரகாசமான கலராக வைத்துள்ளேன். கடந்த 17 ஆண்டுகளாக மிகவும் மன உளைச்சலில் இருந்த எனக்கு, எனது குதூகலத்தை திருப்பித் தந்த நாள் என்பதால், இதனை கொண்டாட நினைக்கிறேன்” என்றார்.   

ALSO READ | அதிசயம்! இறந்த 45 நிமிடத்திற்கு பின் ‘உயிர்த்தெழுந்த’ பெண்..!! 

ஆடம்பரமான விருந்தில், பல விதமான உணவு வகைகளும், ஆட்டமும், பாட்டமும் தூள் பறந்தது. கொண்டாட்டத்திற்கும் குறைவில்லை. இந்தியாவை சேர்ந்த சோனியா 2003 இல் திருமணம் செய்து கொண்டு, இங்கிலாந்து சென்றார். இருப்பினும், இவருக்கும் சிறிது கூட ஒத்து வராத காரணத்தினால், அவர் மகிழ்ச்சியாக இல்லை.  

"நான் மீண்டும் நானாகவே இருக்க விரும்பினேன்; என் திருமணத்திற்கு முன்பு, நான் மிகவும் சுறுசுறுப்பான மற்றும் குதூகலாமன நபராக இருந்தேன், நான் திருமணம் செய்த பிறகு, வாழ்க்கை நரகமானது. நான் என் குடும்பத்தினரிடம் நான் விவாகரத்து செய்ய வேண்டும் என்று சொன்னபோது, அவர்களும் ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் இல்லை. ஆனால் எனக்கு விவாகரத்து கிடைக்க எனது நம்பர்கள் பெரிதும் உதவினர் என்றார். 

ALSO READ | Viral Photos: மலைப்பாம்பு இரத்த வாந்தி எடுப்பதை பார்த்திருக்கிறீர்களா..!!! 

ALSO READ | Viral Video: நடுங்க வைக்கும் வீடியோ; இதயம் பலவீனமானவர்கள் பார்க்காதீர்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News