கழிப்பறையில் ‘திடீர்’ பிரசவம்; ‘உள்ளே’ விழுந்த சிசு இறந்த சோகம்..!!

மலேசியப் பெண் ஒருவர் உணவகத்திற்கு சென்ற போது, அங்கே கழிவறையில் திடீரென அவருக்கு பிரசவம் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 29, 2021, 11:38 AM IST
  • உணவகத்தில் கழிப்பறையில் பெண்னிற்கு திடீர் பிரசவம்
  • 7 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.
  • கழிப்பறைக்குள் விழுந்த சிசு மரணம்.
கழிப்பறையில் ‘திடீர்’ பிரசவம்; ‘உள்ளே’ விழுந்த சிசு இறந்த சோகம்..!! title=

சில நேரங்களில் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ச்சியான சம்பவங்கள் திடீரென நடக்கின்றன. அந்த வகையில், மலேஷியாவின் உணவகம் ஒன்றில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 உணவகத்திற்கு வந்திருந்த பெண் ஒருவர் கழிவறையை பயன்படுத்தும் போது திடீரென ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். மலம் கழிக்க சென்ற அவர் கழிப்பறை உள்ளே பேசினில் குழந்தை இருப்பதை பார்த்து அதிர்ச்சியில் கூச்சல் இட்டுள்ளார். இதில் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், அந்தப் பெண்ணிற்கு தான் கர்ப்பமாக இருப்பது கூட தெரியாமல் இருந்துள்ளது.

மிரர் என்னும் பத்திரிக்கையில் வெளியான ஒரு அறிக்கையில் இந்த சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ளது. மலேசியாவின் சிலாங்கூர் நகரில் உள்ள ஒரு உணவகத்தில் ஒரு பெண் கழிப்பறையில் குழந்தையைப் பெற்றெடுத்தபோது, அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பெண் மதிய உணவு சாப்பிட உணவகத்திற்கு சென்றிருந்தார். மதிய உணவுக்குப் பிறகு, அவள் கழிப்பறைக்குச் சென்ற போது பிரசவம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு எதுவும் புரியவில்லை. திடீரென கழிப்பறை பேசினிற்குள் குழந்தையை பார்த்ததும் அவர் அலறியுள்ளார். 

ALSO READ | Viral Photos: மலைப்பாம்பு இரத்த வாந்தி எடுப்பதை பார்த்திருக்கிறீர்களா..!!!

பெண்ணின் அலறல் சத்த கேட்டு உணவக ஊழியர்கள் நகர தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் அவசர சேவைகளுக்கு அழைப்பு விடுத்தனர். தீயணைப்பு மற்றும் மீட்பு துறை ஊழியர்கள் உணவகத்தை அடைந்து குளியலறையின் கதவை உடைத்து உள்ள்நெ சென்று குழந்தையை மீட்டு காப்பாற்ற முயன்றனர் ஆனால், குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிரவசம் ஏற்பட்ட அந்த பெண்ணை ஆம்புலன்ஸ் மூலம் தஞ்ச் கராங் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சிலாங்கூர் தீயணைப்புத் துறை இயக்குனர் நோராஜம் காமிஸ் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், அந்தப் பெண் ஏழு மாத கர்ப்பிணி என்றும், ஆனால் அந்த பெண்ணிற்கு தான் கர்ப்பமாக இருப்பதே என்பது முற்றிலும் தெரியவில்லை என்றும் கூறினார். தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் கழிப்பறையின் கதவை உடைத்து குழந்தையை மீட்க 10 நிமிடங்கள்ஆனது. அதற்கு சிசுவின் உயிர் பறிபோனது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ALSO READ | Viral News: முதலிரவுக்கு தயாரான மணமகன்; நகையுடன் ‘எஸ்கேப்’ ஆன மணமகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News