எட்டி எட்டி உதைத்தவரை கடித்து தரதரவென இழுத்துச் சென்ற கழுதை: வைரல் வீடியோ

மனிதாபிமானம் இல்லாமல் எட்டி எட்டி உதைத்தவருக்கு, உடனடியாக கழுதை கொடுத்த பதிலடி வீடியோவாக இணையத்தில் பரவியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : May 14, 2023, 10:39 AM IST
  • கழுதையை எட்டி உதைத்தவர்
  • உடனடியாக பழிவாங்கிய நபர்
  • இணையத்தில் வைரலாகும் வீடியோ
எட்டி எட்டி உதைத்தவரை கடித்து தரதரவென இழுத்துச் சென்ற கழுதை: வைரல் வீடியோ  title=

என்ன விதைக்கிறோமோ அதுவே கிடைக்கும், எதை கொடுக்கிறோமோ அதுவே திரும்ப கிடைக்கும் என்பது வாழ்க்கையின் தத்துவங்கள். அதனை அழகாக உணர்த்தும் கழுதையின் வீடியோ இப்போது வைரலாகியுள்ளது. எட்டி எட்டி உதைத்தவரை உடனடியாக கடித்து பழிதீர்த்துக் கொள்கிறது கழுதை. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. அது மனிதராக இருந்தாலும் சரி.. விலங்காக இருந்தாலும் சரி. தங்களால் பொறுக்க முடிகின்ற அளவுக்கே ஒருவர் பொறுமையை கையாளுவார். அதன்பின் கொதித்தெழுந்துவிடுவார்கள். இதனை வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளிடமும் நீங்கள் பார்க்கலாம். 

மேலும் படிக்க | அம்மா போல அன்பை பொழியும் நாய்: இணையத்தை அழ வைத்த வைரல் வீடியோ

அவ்வப்போது விளையாடுவதற்காக வீட்டில் இருக்கும் செல்லப் பிராணிகளை வம்பிழுப்பவர்கள் உண்டு. அப்போது, தன்னால் இயன்ற வரை பொறுமையாக இருக்கும் அந்த பிராணிகள் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து பொங்கியெழுந்துவிடும். நாம் வளர்க்கும் பிராணியாக இருந்தாலும், அவற்றின் கோர முகத்தை அப்போது பார்க்கும் வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கும். ஆனால், அது கொஞ்சம் கோரமாக இருக்கும். நாய் அல்லது பூனை, ஆடு மாடு என எதுவானாலும் சரி, சீண்டிப் பார்த்தால் உங்களுக்கான பின்விளைவுகள் மோசமாக இருக்கும்.

கொஞ்சம் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. அந்த எச்சரிக்கை இல்லாமல் ஒருவர் செய்த செயல், அவரையே பெரும் சிக்கலுக்குள்ளாக்கியிருக்கிறது. வைரலாகியிருக்கும் அந்த வீடியோவில் வளர்க்கும் கழுதையை மனிதாபிமானமில்லாம் ஒருவர் தாக்குகிறார். அவர் தாக்கும் அத்தனை அடிகளையும் வாங்கிக் கொண்டு பதறும் கழுதை, எப்படியாவது தப்பித்தால் போதும் என்கிற நிலைக்கு வந்துவிடுகிறது. அந்த நபர் அடிக்கும் அடிகளையெல்லாம் வெகுவாக பொறுத்துக் கொள்கிறது. 

சில நிமிடங்களில் காட்டுமிராண்டித் தனமாக அடித்த அந்த நபர், அடிப்பதை நிறுத்திவிட்டு கழுதை மீது ஏற முற்படுகிறார். அப்போது, இதுவே சரியான நேரம் எனக் கருதிய கழுதை, அடித்தவரின் காலை நன்றாக பிடித்து கடிக்கத் தொடங்குகிறது. அவர் கதுறுவதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. தன் வினை தன்னைச்சுடும் என்பதற்கு இந்த வீடியோ சரியான எடுத்துக்காட்டு என பலரும் கமெண்ட் அடித்துள்ளனர். 

மேலும் படிக்க | யானையை கடுப்பேற்றும் நபர்: கன்னாபின்னானு விமர்சிக்கும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News