என் சொந்த சகோதரனை நான் இழந்துவிட்டேன்! விஷால் கதறல்!

என் சொந்த சகோதரனை நான் இழந்துவிட்டேன். இது எனக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என பார்கவ் மரணம் குறித்து விஷால் உருக்கமாக டிவீட் செய்துள்ளார்.

Last Updated : May 9, 2018, 08:43 AM IST
என் சொந்த சகோதரனை நான் இழந்துவிட்டேன்! விஷால் கதறல்! title=

என் சொந்த சகோதரனை நான் இழந்துவிட்டேன். இது எனக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என பார்கவ் மரணம் குறித்து விஷால் உருக்கமாக டிவீட் செய்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் பிரபல தயாரிப்பாளரான கோபால் ரெட்டியின் மகன் பார்கவ். இவர் விஷாலுக்கு நெருங்கிய உறவினர். 

சமீபத்தில் பார்கவ் ஆந்திராவில் வகடா எனும் பகுதிக்கு சென்றுள்ளார். கடற்கரைக்கு சென்று நீண்ட நேரமாகி இவர் வராததால் அங்கு அவரை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று காலையில் அவரது உடல் வகடா கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது. தற்போது இவரது மரணம் தற்கொலையா, விபத்தா அல்லது கொலையா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து நடிகர் விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

பார்கவ், நீ உன் வாழ்வை முடித்துக்கொண்டிருக்கக் கூடாது. என் சொந்த சகோதரனை நான் இழந்துவிட்டேன். இது எனக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏன் இப்படி? உன் பிரச்சினைகளை நான் தீர்த்து வைத்திருப்பேனே. டிவிட்டார் பதிவை எழுதும்போது நான் அழுகிறேன்” என அதில் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.  

 

 

 

 

Trending News