சாலையின் நடுவில் வண்டியை ஓட்டி செல்லும் சிறுவன்! வைரலாகும் வீடியோ!

Trichy Viral Video: திருச்சியில் டிவைடரில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற பையனின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   

Written by - RK Spark | Last Updated : May 28, 2024, 10:12 AM IST
  • மேம்பாலத்தில் ஸ்டண்ட் செய்த இளைஞர்.
  • டிவைடரில் தனது வாகனத்தை ஓட்டி உள்ளார்.
  • இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
சாலையின் நடுவில் வண்டியை ஓட்டி செல்லும் சிறுவன்! வைரலாகும் வீடியோ! title=

சாலையின் இருபுறமும் கனரக வாகனங்கள் சென்று கொண்டு இருந்த நிலையில், இளைஞர் ஒருவர் தனது உயிரை பொருட்படுத்தாமல் சாலையில் நடுவில் இருக்கும் டிவைடரில் வண்டியை ஓட்டி செல்கிறார். தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சி எப்போதும் பிஸியான ஒரு நகரமாக இருக்கும். இந்நிலையில் இங்கு சாலையின் நடுவில் இருக்கும் டிவைடரில் இளைஞர் ஒருவர் விதிகளை மீறி இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்லும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. திருச்சி கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் உள்ள டிவைடரில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 

மேலும் படிக்க | முத்தம் கொடுத்தது ஒரு குத்தமா... மணமகனை அடித்து துவைத்த மணப்பெண் வீட்டார்..!!

சாலையில் இருபுறமும் அதிக வாகனங்கள் சென்று கொண்டு இருக்கும் அதே வேளையில், தனது உயிரையும் பொருட்படுத்தாமல் சாலையில் செல்பவர்களின் நிலையையும் கருத்தில் கொள்ளாமல் தனது இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த மே 23 ஆம் தேதி, 'முத்தரையர் சத்திய விழா' வான பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாளையொட்டி, திருச்சியில் உள்ள அவரது உருவப்படத்திற்கு அவரது சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமும் நடத்தினர்.

காவல்துறையினர் போதுமான பாதுகாப்பு வழங்கிய போதிலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. பல இளைஞர்கள் சாலைகளில் அதிக வேகத்தில் சென்று பைக் ஸ்டண்ட் செய்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இந்த வீடியோ சமூக ஊடக தளங்களில் வைரலானதை அடுத்து, திருச்சி பகுதி மக்கள் பலரும் ஆபத்தான பைக் ஸ்டண்ட் இளைஞருக்கு காவல்துறை கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெங்களூருவில் உள்ள மேம்பாலத்தில் ஒரு பெண்ணை மடியில் வைத்துக்கொண்டு இளைஞர் ஒருவர் பைக்கில் ஆபத்தான முறையில் பயணிக்கும் வீடியோ ஒன்று கடந்த வாரம் வைரலானது. இந்நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்குள் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. பெங்களூருவில் வைரல் ஆனா வீடியோவில் பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் முன்பக்கம் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டார். காவல்துறையினர் அவர்களை கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். வடக்கு பெங்களூரில் உள்ள ஹெப்பல் மேம்பாலத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க |  நடுரோட்டில் போலீசை வம்பிழுக்கும் நாய்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News