அங்காரக யோகத்தால் ஆக்ஸ்ட் 10 வரை இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை காலம்

Angaraka Yogam: அங்ககார யோகம் சில ராசிக்காரர்களுக்கு அசுபமாக கருதப்படுகிறது. ராகு-செவ்வாய் மூலம் உருவாகும் அங்காரக யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு அசுபமாக அமையும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 1, 2022, 04:11 PM IST
  • ரிஷப ராசியின் பன்னிரண்டாம் வீட்டில் அங்காரக யோகம் உருவாகி வருகிறது.
  • இந்த காலகட்டத்தில் உங்கள் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
  • இதன் காரணமாக உங்கள் நிதித் திட்டம் பயனற்றதாகிவிடும்.

Trending Photos

அங்காரக யோகத்தால் ஆக்ஸ்ட் 10 வரை இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை காலம் title=

அங்காரக யோகம், ராசிகளில் இதன் தாக்கம்: அங்காரக யோகம் என்பது ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் ராகுவால் உருவாகும் ஒரு ஜோதிட யோகமாகும். வேத ஜோதிடத்தில் உள்ள அதன் வரையறையின்படி ஒரு ஜாதகத்தில் ராகுவும் செவ்வாயும் ஒரே வீட்டில் இருந்தால், அந்த இடம் காரணமாகவோ அல்லது அம்சம் காரணமாகவோ, அங்காரக யோகம் உருவாகிறது. அதாவது, ஜாதகத்தில் ஒரே வீட்டில் ராகுவும் செவ்வாயும் இருந்தாலோ அல்லது ராகுவும் செவ்வாயும் ஒருவரது திருஷ்டியில் ஒருவர் இருந்தாலோ, அப்போது அங்காரக யோகம் உருவாகும்.

ஜோதிட சாஸ்திரப்படி, செவ்வாய் ஜூன் 27 ஆம் தேதி மேஷ ராசியில் பிரவேசித்தார். ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை அங்கு இருப்பார். ராகு ஏற்கனவே மேஷ ராசியில் இருக்கிறார். அத்தகைய சூழ்நிலையில், செவ்வாய் மற்றும் ராகுவின் சேர்க்கை ஏற்பட்டு அங்காரக யோகம் உருவாகிறது. இந்த அங்ககார யோகம் சில ராசிக்காரர்களுக்கு அசுபமாக கருதப்படுகிறது. ராகு-செவ்வாய் மூலம் உருவாகும் அங்காரக யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு அசுபமாக அமையும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

மேலும் படிக்க | ஆக்ஸ்ட் மாத ராசிபலன்: இந்த 5 ராசிகளுக்கு லாபம், மகிழ்ச்சி அனைத்தும் அதிகரிக்கும் 

ரிஷபம்: 

ரிஷப ராசியின் பன்னிரண்டாம் வீட்டில் அங்காரக யோகம் உருவாகி வருகிறது. இந்த காலகட்டத்தில் உங்கள் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக உங்கள் நிதித் திட்டம் பயனற்றதாகிவிடும். கூடுதலாக, நீங்கள் உங்கள் உடன்பிறந்தவர்களுடன் தேவையில்லாமல் வாக்குவாதம் செய்யக்கூடும். வாக்குவாதம் ஏற்பட்டால், அவர்களுடன் நீங்கள் மென்மையாக பேச வேண்டும். உங்கள் எதிரிகள் ஏதாவது சதி செய்ய வாய்ப்பு உள்ளது. இது தவிர, உங்கள் வேலையில் கவனமாக இருக்கவும். இந்த நேரத்தில் நீங்கள் தோல்வியடையக்கூடும் என்பதால் முக்கியமான வணிக முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

சிம்மம்: 

சிம்ம ராசியின் ஒன்பதாம் வீட்டில் அங்காரக யோகம் உருவாகிறது. இந்த நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் வாழ்க்கையில் அதிக மன அழுத்தம் ஏற்படலாம். நீங்கள் நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்த ஒரு முக்கியமான பயணம் சில சவால்களை அளிக்கலாம். வாகனம் ஓட்டும்போது கூடுதல் எச்சரிக்கை தேவை. இது தவிர, குடல் பிரச்சினைகள் கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பதால் உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது.

துலாம்: 

துலா ராசியின் ஐந்தாம் வீட்டில் துலாம் ராசிக்கு அங்காரக யோகம் உருவாகிறது. திருமண வாழ்வில் சில சங்கடங்கள் உருவாகலாம். உயர்கல்வி படிக்கும் சில மாணவர்களுக்கு சில சவால்களை எழலாம். இந்த நேரத்தில் நீங்கள் குடும்பம், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வாக்குவாதம் மற்றும் சண்டையிடும் வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வேலை செய்யும் போது மிகவும் கவனமாக இருக்கவும். உங்கள் பேச்சாலும் கோபத்தாலும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிதி மாறும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News