நிறைவடைகிறது சனியின் வக்ர நிலை: இந்த ராசிகளுக்கு பெரிய நிவாரணம், நிம்மதி கிடைக்கும்

Lord Shani: சனியின் நிலை மாற்றத்திற்கு பிறகு சில ராசிக்காரர்கள் சனியின் கோபத்தில் இருந்து விடுபடுவார்கள். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 16, 2022, 06:17 PM IST
  • விருச்சிக ராசிக்காரர்களுக்கு இக்காலம் மங்களகரமானது.
  • நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால், இப்போது செய்யலாம்.
  • நல்ல லாபம் கிடைக்கும்.
நிறைவடைகிறது சனியின் வக்ர நிலை: இந்த ராசிகளுக்கு பெரிய நிவாரணம், நிம்மதி கிடைக்கும் title=

சனி பகவானின் ராசி மாற்றம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி பகவான் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாவார். சனி பகவானின் கோபம் தங்கள் மீது பாய்ந்துவிடுமோ என அஞ்சாதவர்கள் இருக்க மாட்டார்கள். மனிதர்களின் செயல்களுக்கு ஏற்ப, கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை அளிப்பதால், சனி பகவான் நீதிக்கடவுளாக அழைக்கப்படுகிறார். சனி ஒருவரது நல்ல மற்றும் தீய கர்மாக்களுக்கு ஏற்றவாறு பலன்களை வழங்குகிறார். இரண்டரை ஆண்டுகளில் ஒரு முறை சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்த நேரத்தில் சனி பகவான் மகர ராசியில் வக்ர நிலையில், அதாவது பிற்போக்கான நிலையில் இருக்கிறார். சனியின் இந்த தலைகீழ் சஞ்சாரத்தால் பல ராசிக்காரர்கள் சனியின் கோபத்திற்கு ஆளாகி வருகின்றனர். இவர்களுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கப் போகிறது என்பது நல்ல விஷயமாகும். அக்டோபர் 23 ஆம் தேதி, சனி பகவான் மகர ராசியில் முழுமையாக இயல்பு நிலைக்கு மாறுவார். சனியின் நிலை மாற்றத்திற்கு பிறகு சில ராசிக்காரர்கள் சனியின் கோபத்தில் இருந்து விடுபடுவார்கள். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷம்:

ஜோதிடத்தின் படி, சனியின் இயக்கம் மேஷத்தின் பத்தாம் வீட்டில் இருக்கப் போகிறது. வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் சஞ்சாரம் பல நன்மைகளை அள்ளித் தரும். அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கும் இந்த வேளையில் நல்ல செய்திகள் கிடைக்கும். மேஷ ராசிக்காரர்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். லாபம் உண்டாகும். 

கடகம்:

கடக ராசிக்கு ஏழாம் வீட்டில் சனி சஞ்சரிக்கப் போகிறார். மகர ராசியில் சனி சஞ்சரித்த பிறகு, இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் துக்கங்கள் நீங்கி மகிழ்ச்சி மட்டுமே வந்து சேரும். மரியாதை அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கை துணையின் ஆதரவைப் பெறுவீர்கள்.

மேலும் படிக்க | கர்ம கணக்குகளை தயவு தாட்சண்யம் இன்றி பைசல் செய்யும் சனீஸ்வரர் 

துலாம்:

துலாம் ராசிக்கு நான்காம் வீட்டில் சனி தனது இயக்கத்தை மாற்றவுள்ளார். இந்த காலகட்டத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் உயரும். சில நல்ல செய்திகள் கிடைக்கும். துலாம் ராசிக்காரர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

விருச்சிகம்:

புதிய வேலைகளை தொடங்கும் எண்ணம் இருந்தால், இந்தக் காலத்தில் தொடங்குவது சரியாக இருக்கும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு இக்காலம் மங்களகரமானது. நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால், இப்போது செய்யலாம், நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

மீனம்:

சனி பகவான் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை பரிசாக அளிக்கப் போகிறார். மகர ராசியில் சனி இருப்பதால் மீன ராசிக்காரர்கள் மன உளைச்சலில் இருந்து விடுபடுவார்கள். அதே நேரத்தில், நீங்கள் வேலை மற்றும் வியாபாரம் இரண்டிலும் வெற்றி பெறுவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சுபகிருது ஆண்டின் புரட்டாசி மாத ராசிபலன்! கவனமாக இருங்கள் மேஷ ராசிக்காரரே! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News