சுக்கிரன் ராசி மாற்றம்: இந்த ராசிகளின் வாழ்க்கை மாறவுள்ளது, மகிழ்ச்சியும் வெற்றியும் பெருகும்

Venus Transit: சுக்கிரன் கன்னி ராசியில் நுழைவதால் இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கை உருவாகும். இந்த சேர்க்கையால் இந்த ராசிக்காரர்கள் அதன் சிறப்பான பலனைப் பெறப் போகிறார்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 15, 2022, 06:15 PM IST
  • கன்னி ராசியில் சுக்கிரன் நுழைவதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நன்மைகள் உண்டாகும்.
  • ரிஷபத்தை ஆளும் கிரகம் சுக்கிரன் ஆகும்.
  • சுக்கிரனின் சஞ்சாரத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மரியாதையும் மதிப்பும் அதிகரிக்கும்.
சுக்கிரன் ராசி மாற்றம்: இந்த ராசிகளின் வாழ்க்கை மாறவுள்ளது, மகிழ்ச்சியும் வெற்றியும் பெருகும் title=

சுக்கிரன் பெயர்ச்சி 2022, ராசிகளில் அதன் பலன்கள்: சுக்கிரன் கிரகம் மகிழ்ச்சி, செழிப்பு, மகிமை, செல்வம் போன்றவற்றுக்கு காரணமான கிரகமாக கருதப்படுகிறது. செப்டம்பர் 24 ஆம் தேதி சுக்கிரன் கிரகம் கன்னி ராசியில் சஞ்சரிக்கப் போகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களின் இட மாற்றமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிர கிரகத்தின் மாற்றமும் அனைத்து கிரகங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த மாற்றம் சில ராசிகளில் நல்ல பலனையும், சில ராசிகளில் அசுப பலனையும் தரும். எனினும், மூன்று ராசிகளுக்கு இந்த மாற்றம் மிக நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கவுள்ளது. இந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

இந்த நேரத்தில் சுக்கிரன் கன்னி ராசியில் நுழைவார்

செப்டம்பர் 24 ஆம் தேதி காலை 8:51 மணிக்கு கன்னி ராசியில் சுக்கிரன் நுழையவுள்ளார். சூரியன் ஏற்கனவே கன்னி ராசியில் இருக்கிறார். புதன் கன்னி ராசியில் வக்ர நிலையில் உள்ளார். அப்படிப்பட்ட நிலையில் சுக்கிரன் கன்னி ராசியில் நுழைவதால் இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கை உருவாகும். இந்த சேர்க்கையால் இந்த ராசிக்காரர்கள் அதன் சிறப்பான பலனைப் பெறப் போகிறார்கள்.

ரிஷபம்:

கன்னி ராசியில் சுக்கிரன் நுழைவதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நன்மைகள் உண்டாகும். ரிஷபத்தை ஆளும் கிரகம் சுக்கிரன் ஆகும். சுக்கிரனின் சஞ்சாரத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மரியாதையும் மதிப்பும் அதிகரிக்கும். நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் முடிவடையும். நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால், இந்த நேரம் அதற்சாதகமானது. இந்த காலகட்டத்தில் நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. மேலும், இந்த காலகட்டத்தில் வியாபாரத்தில் நல்ல பண ஆதாயம் கிடைக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள்.

மேலும் படிக்க | சனிப் பெயர்ச்சி: தீபாவளி முதல் அமோக வாழ்க்கையை பெறும் ‘5’ ராசிகள்! 

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் மேலோங்கும். மேலும், இந்த காலகட்டத்தில் வருமானம் கூடும். சுக்கிரனின் சஞ்சாரத்தால் இந்த ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. மிதுன ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும்.

கன்னி:

செப்டம்பர் 24க்கு பிறகு கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் செய்யும் அனைத்து வேலைகளிலும் வெற்றி பெறுவீர்கள். சுக்கிரனின் சஞ்சாரம் அனைத்து பணிகளிலும் வெற்றியை தரும். நம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் புதிய உயரங்களை அடைய இந்த நேரத்தில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மிடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | குரு வக்ர நிலை: இந்த ராசிகளுக்கு சுபமான நேரம், ராஜயோகத்தால் தலைவிதி மாறும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News