புதன் பெயர்ச்சியில் உருவாகும் ராகு-சுக்கிரன் திரிகிரஹி யோகம்..! என்னென்ன பலன்கள்?

புதனின் பெயர்ச்சி காதல் உறவுகளில் நல்ல முடிவுகளை கொடுக்கும். இதுவரை ஏதேனும் மோதல்கள், பிரிவினைகள் அல்லது தவறான புரிதல்கள் இருந்தால் புதன் பெயர்ச்சிக்கு பிறகு மாற்றம் உண்டாகும்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 2, 2023, 06:38 PM IST
புதன் பெயர்ச்சியில் உருவாகும் ராகு-சுக்கிரன் திரிகிரஹி யோகம்..! என்னென்ன பலன்கள்?  title=

புதன் ராசி பரிவர்தன்: புதன் மதியம் 2.56 மணிக்கு மேஷ ராசியில் பிரவேசித்துள்ளார். புதன் மேஷ ராசியில் நுழைந்தபோது திரிகிரஹி யுதி யோகம் உருவாகிவிட்டது. சுக்கிரனும் ராகுவும் ஏற்கனவே மேஷ ராசியில் உள்ளனர். இப்போது புதனும் அவர்களுடன் இணைந்துவிட்டார். திரிகிரஹி யோகம் ஏப்ரல் 6-ம் தேதி இரவு 11.01 மணி வரை இருக்கும். இந்த ஆறு நாட்களும் வியாபாரம், காதல், திருமண வாழ்க்கைக்கு முக்கியமானதாக இருக்கும்.

உறவுகளில் தாக்கம்

திரிகிரஹி கூட்டணி தனிப்பட்ட உறவுகள் மற்றும் வணிக ஒப்பந்தங்கள் மற்றும் உறவுகளை பாதிக்கப் போகிறது. சுக்கிரன்-ராகுவுடன் புதன் வருவது உறவுகளில் சமநிலையைப் பேணுவதைக் குறிக்கிறது. உங்கள் குடும்பத்தினருடனோ அல்லது நண்பர்களுடனோ உங்களுக்கு மோசமான உறவு இருந்தால், இந்த ஆறு நாட்களில் அவற்றைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள். இந்த நாட்களில் திருமண வாழ்க்கையில் இருந்த சண்டைகள் முடிவுக்கு வரும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். ராகுவால் ஏற்பட்ட மன குழப்ப நிலை புதன் வருகையால் சீராகும். சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்கும் திறனை வளர்த்துக் கொள்வார்கள்.

மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சி 2023: ஏப்ரல் 6 முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும்

வணிகத்தில் தாக்கம்

புதன் கிரகம் ஆடம்பர மற்றும் பொருள் வசதிகளின் சின்னமாக உள்ளது. அதே நேரத்தில் புதனின் இருப்பு வணிகத்திற்கு முக்கியமானது. மேஷ ராசியில் இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால் வியாபாரப் பணிகள் வேகமாக நடைபெறும். புதிய வேலை ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய வேலைகளைத் தொடங்க நல்ல நேரம். இவர்களுடன் ராகு இருப்பது பொருளாதாரத்தில் திடீர் உயர்வு தரும். செவ்வாய் ராசியில் இணைவதால் விவசாயம், சொத்து வேலை, மருந்துத் தொழில் போன்ற நிலம் தொடர்பான வேலைகளுக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கலாம்.

யாருக்கு சிறந்தது? யாருக்கு பாதகம்?

சிறப்பு: மேஷம், ரிஷபம், துலாம், விருச்சிகம்

நடுத்தரம்: மிதுனம், கன்னி, சிம்மம், கடகம்

கவனம்: தனுசு, மகரம், கும்பம், மீனம்

திரிகிரஹி யுதியின் போது, ​​அனைத்து ராசிக்காரர்களும் தினமும் தங்கள் நெற்றியில் குங்குமத் திலகத்தைத் தடவ வேண்டும். இப்படி செய்தால் 6 நாட்களில் தொடங்கும் ஒவ்வொரு செயலிலும் வெற்றி உண்டாகும்.

மேலும் படிக்க | கும்பத்தில் சனி, 2025 வரை இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News