விநாயகர் சதுர்த்தி 2024.. கட்டாயம் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய சுவாரஷ்ய தகவல்கள்

இந்த ஆண்டு பிள்ளையார் சதுர்த்தி வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்நாளில் நாம் புதிய விநாயகர் திருவுருவத்தை மண்ணில் செய்து வழிபாடு செய்தால் மிகந்த பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 27, 2024, 07:52 PM IST
  • பிள்ளையார் சதுர்த்தி வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி.
  • விநாயகர் திருவுருவத்தை மண்ணில் செய்து வழிபாடு.
விநாயகர் சதுர்த்தி 2024.. கட்டாயம் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய சுவாரஷ்ய தகவல்கள் title=

இந்த ஆண்டு பிள்ளையார் சதுர்த்தி வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்நாளில் நாம் புதிய விநாயகர் திருவுருவத்தை மண்ணில் செய்து வழிபாடு செய்தால் மிகந்த பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

விநாயகர் சதுர்த்தி: 
விநாயகர் அவதரித்த தினத்தை தான் நாம் விநாயகர் சதுர்த்தி (Ganesh Chaturthi) தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடி வருகிறோம். விநாயகரை நாம் மொத்தம் 51 வடிவ சிலைகளை வழிபட்டு வருகிறோம்.
விநாயகர் துதி: 

விநாயகர் பிறந்த கதை: 
பிரம்மா ஒரு சமயம் கொட்டாவி விடவே அதில் இருந்து சிந்தூரனன் என்ற ஓர் அரக்கன் தோன்றினான். அவனுடைய சிவந்த தேகத்தைப் பார்த்து பயந்த பிரம்மா, முன்னெச்சரிக்கையாய் அவன் கேட்காமலேயே அவனுக்கு சில வரங்களைத் தந்தார். கேட்காமலேயே வரம் கிடைத்த மமதையில் மூவுலகையும் ஆட்டிப் படைத்தான் அரக்கன். மும்மூர்த்திகளே செய்வதறியாமல் திகைக்க கணபதியைப் பணிந்தனர். விநாயகர் உடனே தோன்றி, “கவலை வேண்டாம். நான் உமா தேவியாரின் திருவயிற்றில் அவதரிப்பேன்” எனக் கூறி மறைந்தார்.

மேலும் படிக்க | September grah gochar: செப்டம்பர் மாத கிரக பெயர்ச்சிகள்.. பொருளாதார வெற்றி, அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு

கருவுற்று உமாதேவியாரின் திருவயிற்றில், காற்றாக நுழைந்த சிந்தூரானன் குழந்தையின் தலையைத் திருகி எடுத்துக் கொண்டு போய் விட, தலையே இல்லாமல் பிறந்த குழந்தையைப் பார்த்து அனைவரும் பதறவே கலங்காதே என்று சொன்ன சிவபெருமான் முன்பொரு சமயம் கஜமுகாசுரன் கேட்டுக் கொண்டபடி அவனுடைய தலையைத் தன் குழந்தையின் தலை இருக்கும் இடத்தில் பொருத்தினார். கஜானனன் ஆனார் விநாயகப் பெருமான்.

உமாதேவியாரிடம் வளர்ந்து வந்த கஜானனன் உரிய காலம் வந்ததும் சிந்தூரனனை அழிக்கப் புறப்பட்டார். சிந்தூரனனைத் தூக்கி எடுத்துத் தன் துதிக்கையால் ஓங்கி அடித்து அவன் ரத்தத்தைத் தன் உடம்பில் பூசிக் கொண்டார். செந்நிறமான விநாயகர் அன்று முதல் "சிந்தூர விநாயகர்" என்ற பெயரும் பெற்றார். இது தான் பார்கவ புராணம்.

விநாயகருக்கு யானை முகம் உருவான கதை: 
நமது புராணங்களின் கூற்றுப்படி, ஒருமுறை சிவபெருமான் வெளியே சென்றிருந்த சமயம் பார்வதிதேவி நீராடச்சென்றார். அப்போது எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்க கூடாது என விநாயகருக்கு அறிவுறுத்திவிட்டு பார்வதி தேவியார் நீராடச் சென்று விட்டார். அச்சமயம் அங்கு வந்த சிவபெருமானைப் பிள்ளையார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் கோபம் கொண்ட சிவன் பிள்ளையாரின் தலையை வெட்டி விட்டு உள்ளே சென்று விட்டார். 

அப்போது, விநாயகர் தலை இல்லாமல் கிடந்ததை கண்டு பார்வதி தேவி கோபமும், ஆவேசமும் கொண்டார். அவரை சாந்தப்படுத்துவதற்கு முடிவு செய்த சிவன், தனது கணங்களை அழைத்து வட திசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் வெட்டி வருமாறு பணித்தார். அதன்படி கணங்கள் வடதிசை நோக்கிச் சென்ற பொழுது அவர்களுக்கு ஒரு யானையே முதலில் தென்பட்டது.

அவர்கள் அதன் தலையை வெட்டி எடுத்துச் சென்று சிவனிடம் கொடுத்தனர். அவர் அத்தலையை வெட்டுண்டு கிடந்த பிள்ளையாரின் முண்டத்தில் வைத்து உயிரூட்டி விட்டார். இதைக் கண்டு சாந்தமடைந்த தேவியார் அகமகிழ்ந்து பிள்ளையாரைக் கட்டி அணைத்துக் கொண்டார்.

சிவன் அந்தப் பிள்ளையாருக்கு ‘கணேசன்’ என நாமம் சூட்டித் தமது கணங்களுக்கு தலைவராக நியமித்தார் என ‘நாரதபுராணத்தில்’ தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே பிள்ளையாரின் அவதார கதையாகும். 

சதுர்சி அன்று விநாயகருக்கு படைக்கும் உணவு: 
விநாயகர் சதுர்த்தி அன்று அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப்பழம் போன்றவற்றை விநாயகருக்கு படைத்து வழிபட வேண்டும். மேலும், அருகம்புல், மல்லிகைப்பூ, எருக்கம்பூ ஆகியவை படைக்கப்பட வேண்டும்.

மேலும் படிக்க | Guru Vakra Peyarchi 2024 : ரிஷபத்தில் வக்ரமாகும் குரு! வக்ர இயக்கத்தால் பணமழையில் நனைந்து மகிழும் ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News