சனி ஜெயந்தியோடு வரும் ஜயேஷ்ட அமாவாசை..! கணவனின் ஆயுள் நீடிக்க செய்ய வேண்டிய பூஜை

ஜயேஷ்ட அமாவாசை இம்முறை சனி ஜெயந்தியில் வருகிறது. இந்நாளில் திருமணமான பெண்கள் கணவனின் ஆயுளுக்காக சிறப்பு வழிபாடு நடத்த மிகவும் உகந்த நாள்.   

Written by - S.Karthikeyan | Last Updated : May 13, 2023, 07:54 AM IST
  • மே 19 ஆம் தேதி வரும் அபூர்வ அமாவாசை
  • முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த நாள்
  • பெண்கள் சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும்
சனி ஜெயந்தியோடு வரும் ஜயேஷ்ட அமாவாசை..! கணவனின் ஆயுள் நீடிக்க செய்ய வேண்டிய பூஜை title=

இன்னும் சில நாட்களில் அபூர்வ அமாவாசை வர இருக்கிறது. மே 19 ஆம் தேதி வரும் இந்த அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஒரே நாளில் மூன்று விஷேஷங்கள் வர இருக்கின்றன. சனி ஜெயந்தி, ஜயேஷ்ட அமாவாசை மற்றும் சாவித்திரி பூஜை ஆகியவை ஒன்றாக சேர்ந்து வருவது மிகவும் அபூர்வமாக பார்க்கப்படுகிறது. மூன்று விரதங்களையும் ஒரு சேர கடைபிடித்து  விஷ்ணு, சங்கரர் மற்றும் சனி பகவானின் அருளும் ஆசியும் பெறலாம். கணவனின் ஆயுளுக்காக பெண்களும், முன்னோர் சாபம் நீங்க பரிகாரம் செய்யவும் இந்த நாள் மிகவும் உகந்தது மற்றும் விஷேஷமானது. இப்படியொரு நாள் இனியொரு முறை வரும் என்று சொல்ல முடியாது. ஜோதிடத்தில் அபூர்வத்தின் உச்சமாக பார்க்கப்படும் இந்த ஜ்யேஷ்ட அமாவாசை அன்று நீராடுவது, தானம் செய்வது, விரதம் இருப்பது, ஆலமரத்தை வழிபடுவது மிகுந்த பலன்களைத் தரும். 

ஜயேஷ்ட அமாவாசை 2023 எப்போது?

ஜயேஷ்ட அமாவாசை அன்று புண்ணிய நதிகளில் நீராடினால் 7 பிறவிகளின் பாவங்கள் நீங்கும். அதுமட்டுமல்லாமல், இந்த நாளில் கண்டிப்பாகச் தர்ப்பணம்  செய்வது, முன்னோர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். ஜ்யேஷ்ட அமாவாசை திதி மே 18, 2023 அன்று இரவு 9.42 மணிக்கு தொடங்கி மே 19, 2023 அன்று இரவு 9.22 மணிக்கு முடிவடையும். உதயதிதியின்படி மே 19 வெள்ளிக்கிழமை ஜ்யேஷ்ட அமாவாசையாகக் கருதப்படுகிறது.

மேலும் படிக்க | இன்னும் 5 மாதங்கள்..ராகு பெயர்ச்சியால் இந்த 3 ராசிகளுக்கு பம்பர் அதிர்ஷ்டம்

அமாவாசை பரிகார நேரம்

ஜ்யேஷ்ட அமாவாசை அன்று நீராடும் நேரம் - காலை 05.15 முதல் மாலை 04.59 வரை

சாவித்திரி பூஜை முஹூர்த்தம் - காலை 05.43 முதல் 08.58 வரை

சனி பகவான் பூஜை முஹூர்த்தம் - மாலை 06.42 முதல் 07.03 வரை

ஜயேஷ்ட அமாவாசை பரிகாரங்கள்:

* ஜயேஷ்ட அமாவாசை நாளில் புனித நதி, நீர்த்தேக்கம் அல்லது குளத்தில் நீராடுங்கள். மேலும் சூரியபகவானுக்கு அர்க்யா அர்ச்சனை செய்யவும்.

* அமாவாசை தினத்தன்று பாயும் நீரில் கருப்பு எள்ளைப் விட்டால் பல தொல்லைகள் நீங்கும்.

* முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைய தர்ப்பணம் கொடுத்து, ஏழைகளுக்கு அன்னதானம் செய்யவும் அமாவாசை நாள் முக்கியமானது. இந்நாளில் குளித்த பின் தானம் செய்யவும்.

* ஜயேஷ்ட அமாவாசை நாளில், திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக யம தேவதையை வைத்து வழிபட வேண்டும்.

* சனி தேவன் ஜயேஷ்ட அமாவாசை அன்று பிறந்தார். சனி ஜெயந்தி அன்று சனிதேவருக்கு கடுகு எண்ணெய், கறுப்பு எள், கறுப்பு ஆடைகள் மற்றும் நீல நிற மலர்களை சமர்பிக்கவும். சனி மந்திரத்தை உச்சரிக்கவும்.

மேலும் படிக்க | 4 ராசிக்காரர்களுக்கு ’டபுள் ஜாக்பாட்’..! சந்திரனுடன் சேரும் சுக்கிரன்.. செல்வம் கொட்டும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News