சுப காரியம் செய்ய உகந்த காலம்... முகூர்த்த நாள்கள் எப்போது?

வரும் மார்ச் 15ஆம் தேதி பங்குனி மாதம் பிறக்க உள்ள நிலையில், இதில் பல ராசிக்காரர்களுக்கு திருமண காலம் கைக்கூடி வரும் என கூறப்படுகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Mar 11, 2023, 12:52 AM IST
  • சூரியனின் பெயர்ச்சி மக்களின் வாழ்க்கையை பாதிக்கிறது.
  • சூரியபகவான் மீன ராசியில் பிரவேசிக்க உள்ளார்
சுப காரியம் செய்ய உகந்த காலம்... முகூர்த்த நாள்கள் எப்போது? title=

கிரகங்களின் அரசனான சூரிய பகவான் மாதம் ஒருமுறை தனது ராசியை மாற்றிக் கொள்கிறார். சூரியனின் இந்த ராசி மாற்றம் சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. மார்ச் 15ஆம் தேதி காலை 6.58 மணிக்கு சூரியபகவான் மீன ராசியில் பிரவேசிக்க உள்ளார். 

ஏப்ரல் 14, 2023 அன்று பிற்பகல் 3.12 மணி வரை சூரியன் இதே ராசியில் சஞ்சரிக்கிறார். இதற்குப் பிறகு சூரிய பகவான் மேஷ ராசியில் நுழைவார். மீன ராசியின் அதிபதி வியாழன். உயர் பதவி, கௌரவம் மற்றும் மரியாதை ஆகியவற்றின் காரணியாக சூரியன் கருதப்படுகிறது. சூரியனின் பெயர்ச்சி மக்களின் வாழ்க்கையை பாதிக்கிறது. 

இந்த ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் ஒரு வரப்பிரசாதம்

ரிஷபம் 

ரிஷப ராசியின் பதினொன்றாம் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கப் போகிறார். மேலும், இந்த ராசியின் நான்காம் வீட்டின் அதிபதி சூரியன். இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். உங்கள் முதலீடு பலன் தரும். வாகனம் அல்லது வீடு வாங்க வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க | Astro: நோயற்ற வாழ்வை அருளும் சீதளா அஷ்டமி விரதம்!

விருச்சிகம்

சூரியன் உங்கள் ராசியில் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இதன் மூலம் உத்தியோகத்தில் பல நன்மைகளைப் பெறுவீர்கள். உங்கள் சம்பளம் உயரும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் விண்ணப்பதாரர்கள் வெற்றி பெறுவார்கள். இந்த நேரம் உங்களின் திருமணம் நிச்சயமாவதற்கானது. சூரியன் இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார்.

கும்பம்

குடும்பத்துடன் உல்லாசமாக இருப்பீர்கள். குடும்பத்தில் இருந்த பகை நீங்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது. இந்த நேரம் திருமணம் செய்வதற்கு ஏற்றது.

மீனம்

இந்த ராசியில் சூரியன் லக்ன வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் பணி பாராட்டப்படும். உங்களுக்கு பதவி உயர்வு அல்லது உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்களின் திருமண காலகட்டம் நெருங்கிவிட்டது. 

வரும் பங்குனி மாதத்தில் திருமணம் செய்துகொண்டால், பல நன்மைகளும் கூடி வரும். நீண்ட நாள்களாக திருமணமாகமல் இருப்பவர்களுக்கு இந்த காலகட்டம் நிச்சயம் ஒரு வரப்பிரசாதம்தான். வரும் மார்ச் 15ஆம் தேதி முதல் ஏப். 13ஆம் தேதி வரை பங்குனி மாதம்தான். தற்போது மாசி நடைபெற்று வரும் நிலையில், இன்னும், சுமார் வார காலத்தில் பங்குனி வர உள்ளது. பங்குனி மாதத்தில், இரண்டு தேய்பிறை மற்றும் இரண்டு வளர்பிறை முகூர்த்தங்கள் இருக்கின்றன. 

தமிழ் முகூர்த்த நாள்கள் 

1. பங்குனி 03

2. பங்குனி 09

3. பங்குனி 12

4. பங்குனி 27 

ஆங்கிலத்தில்... 

1. மார்ச் 17 - தேய்பிறை

2. மார்ச் 23 - வளர்பிறை 

3. மார்ச் 27 - வளர்பிறை 

4. ஏப்ரல் 10 - தேய்பிறை

மேலும் படிக்க | மகிழ்ச்சியான திருமண வாழ்விற்கு... உங்களுக்கு ஏற்ற பொருத்தமான ராசியை அறியலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News