ஜனவரி முதல் இந்த ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனியிலிருந்து விடுதலை: உங்க ராசி என்ன?

Lord Shani: 17 ஜனவரி 2023 அன்று சனி ராசியை மாற்றுவார். சனியின் இந்த பெயர்ச்சியால், துலாம் மற்றும் மிதுன ராசிக்காரர்கள் சனி தசையிலிருந்து விடுதலை பெறுவார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 17, 2022, 06:40 PM IST
  • சனிபகவானின் தீய பார்வை இருக்கும் ராசிக்காரர்கள் அசுபமான பலன்களை அனுபவிக்கிறார்கள்.
  • அவர்களுக்கு மலை போல் சங்கடங்கள் வருகின்றன.
  • பல தீமைகள் ஒரே நேரத்தில் அவர்களை சூழ்ந்துகொள்கின்றன.
ஜனவரி முதல் இந்த ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனியிலிருந்து விடுதலை: உங்க ராசி என்ன? title=

சனி பகவானின் மாற்றம், ராசிகளில் அதன் தாக்கம்: வேத ஜோதிடத்தின்படி, ஒன்பது கிரகங்களில் சனி கிரகத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. அனைத்து கிரகங்களிலும் சனி பகவான் மிகவும் மெதுவாக இயங்கும் கிரகமாக கருதப்படுகிறார். சனி பகவானின் ராசி மாற்றமும், நிலை மாற்றமும், அவரது இயக்கமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிக்க இரண்டரை வருடங்கள் ஆகும். சனி பகவான் ராசி சக்கிரத்தை முடிக்க சுமார் 30 ஆண்டுகள் ஆகும்.

சனிபகவானின் தீய பார்வை இருக்கும் ராசிக்காரர்கள் அசுபமான பலன்களை அனுபவிக்கிறார்கள். அவர்களுக்கு மலை போல் சங்கடங்கள் வருகின்றன. பல தீமைகள் ஒரே நேரத்தில் அவர்களை சூழ்ந்துகொள்கின்றன. ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசையின் தாக்கம் பலரை பாடாய் படுத்துகிறது. இதன் தாக்கத்தால் மக்கள் பல வித இன்னல்களை எதிர்கொள்கின்றனர். 

ஜனவரி 2023 இல் சனியின் மாற்றம்:

இந்து நாட்காட்டியின் படி, 2022 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி முதல் சனி பகவான் மகர ராசியில் வக்ர நிலையில், அதாவது வழக்கமான நிலைக்கு எதிரான நிலையில் உள்ளார். 23 அக்டோபர் 2022 அன்று தனது இயல்பான நிலைக்கு மாறுவார். ஜனவரி 17, 2023 வரை சனி பகவான் மகர ராசியில் இருப்பார். அதன் பிறகு கும்ப ராசியில் நுழைகிறார். அன்றைய தினத்தில் சனி மகர ராசியிலிருந்து விலகி கும்ப ராசிக்கு மாறுவார். சனி கும்ப ராசிக்குள் நுழைவதால் சில ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசையிலிருந்து விடுதலை கிடைக்கும்.

மேலும் படிக்க | ராசி மாறுகிறார் புதன்: இந்த ராசிகளுக்கு அமோகமான ராஜயோகம் உண்டாகும் 

ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திலிருந்து விடுதலை: 

17 ஜனவரி 2023 அன்று சனி ராசியை மாற்றுவார். சனியின் இந்த பெயர்ச்சியால், துலாம் மற்றும் மிதுன ராசிக்காரர்கள் சனி தசையிலிருந்து விடுதலை பெறுவார்கள். மறுபுறம், தனுசு ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திலிருந்து நிவாரணம் பெறுவார்கள். இப்படிப்பட்ட நிலையில் துலாம், மிதுனம், தனுசு ராசிக்காரர்களுக்கு சனியின் அசுப பலன்களில் இருந்து விடுதலை கிடைக்கும். 

இதன் பிறகு, இந்த ராசிக்காரர்களுக்கு அனைத்து வித நன்மைகளும் ஏற்படும். புதிய வேலை கிடைக்கும். ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு பதவி உயர்வு ஆகியவை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

மேலும் படிக்க | கும்ப ராசிக்கு செல்லும் சனி; ஏழரை நாட்டு சனியினால் நெருக்கடியில் ‘சில’ ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News