மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி சங்கஷ்டி சதுர்த்தி விரதம் இன்று! விநாயகர் வழிபாடு...

Lord Ganesh Chaturthi : மாசி மாத பௌர்ணமி மிகவும் விசேஷமானது என்றால், அடுத்து வரும் நான்காம் நாள் வரும் சங்கடஹர சதுர்த்தி. வழிபாடு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய விரதம் ஆகும்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 28, 2024, 07:03 AM IST
  • மாசி மாத சங்கடஹர சதுர்த்தி
  • நன்மைகளை தரக்கூடிய சதுர்த்தி விரதம்
  • விக்னங்களை விலக்கும் விக்ன விநாயகர்
மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி சங்கஷ்டி சதுர்த்தி விரதம் இன்று! விநாயகர் வழிபாடு... title=

Spiritual information About Sanakarahara Chaturthi : இந்த ஆண்டு பிப்ரவ்ரி மாதம் 28ம் நாளான இன்று சங்கடஹர சதுர்த்தி நாள் ஆகும். சங்கட என்றால் துன்பம் ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. பௌர்ணமிக்கு அடுத்ததாக நான்காம் நாள் சதுர்த்தி திதி,சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது. மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தி, சங்கஷ்டி சதுர்த்தி என்று அறியப்படுகிறது

சங்கடஹரன் சிவன் மைந்தன்

முழு முதற்கடவுள் என இந்துக்கள் வணங்கி வழிபடுபவர் சிவனின் மூத்த மைந்தன் கணபதி என்பது இந்து மத நம்பிக்கை. விநாயகர் என்ற சொல்லுக்கு ‘தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன்’ என்று பொருள் சொல்லப்படுகிறது. விக்னங்களை, காரியத்தடைகளை ஏற்படாமல் காப்பாற்றும் விநாயகரே, அனைவராலும் தொழப்படும் தெய்வங்களில் முதன்மையானவர்.  நினைத்த காரியம், தொடங்கும் செயல்கள் இலகுவாக முடிய, விநாயகரின் திருவருள் முக்கியமானது. அதனால் தான் எந்த ஒரு செயலையும் தொடங்கும் போது, விநாயகர் பூஜையை முதலில் செய்கிறோம்.

சங்கடஹர சதுர்த்தி

சங்கம் என்றால் சேருதல் என்று பொருள். கஷ்டம் மனிதனின் வாழ்வில் சேருவதே (சங்+கஷ்டம்) சங்கஷ்டம் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இந்த சங்கஷ்டமே பின்பு ‘சங்கட’மாக மருவி, பேச்சு வழக்கில் சங்கரஹர சதுர்த்தி என நிலைத்துவிட்டது  

சங்கடஹர சதுர்த்தியன்று, இருள் கவியும் மாலை நேரத்தில் விநாயகரை வழிபடுவது சிறப்பு. நம்மை நோக்கி வரும் துன்பங்களை, தடைகளை, கஷ்டங்களை எதிர்கொண்டு பாதுகாப்பதற்காக விநாயகரை வழிபடும் விரதம் என்று பெயர் பெற்றது சங்கடஹர சதுர்த்தி.

சங்கஹர சதுர்த்தி புராணம்

ஒருமுறை சந்திரனின் தவறான செயலுக்கு விநாயகர் கோபமடைந்தார். பிரம்மனை பார்த்து, இகழ்ச்சியுடன் சிரித்த சந்திரனின் மீது விநாயகர், சந்திரனின் பிரகாசம் உலகில் எங்கும் இல்லாமல் போகட்டும் என்றும், உன் பிரகாசம் யார் கண்களுக்கும் புலப்படாமல் மறைந்து போகட்டும் என்றும் கோபத்தில் சொல்லிவ்ட்டார். வானில் சந்திரன் மறைந்ததால் உலகின் சுழற்சியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. 

மேலும் படிக்க | செவ்வாய் - சனி சேர்க்கை... அதிர்ஷ்ட மழையில் நனையும் ‘4’ ராசிகள்! 

நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த இந்திரனும், தேவர்களும், நிலவு வானில் தோன்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, சந்திரனுக்கு சாப விமோசனம் தந்தருளுமாறு விநாயகரை வேண்டினார்கள். கோரிக்கையை ஏற்றுக் கொண்ட விநாயகரும் சந்திரனுக்கு கொடுக்கப்பட்ட சாபத்தை குறைத்து விட்டதோடு, ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளை அடுத்து வரும் சதுர்த்தியன்று விரதம் இருந்து வழிபடுபவர்களின் சங்கடங்களை எல்லாம் நிவர்த்தி செய்வதாகவும் வாக்களித்தார். அதன்படி, விநாயகருக்கு ஒவ்வொரு மாத சங்கட சதுர்த்தியன்றும் விரதம் இருந்து மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

சந்திரனுக்கு சாபவிமோசனம்

விநாயகரின் கோபத்தை உணர்ந்த சந்திரன், தன் தவறால் வருந்தி, விநாயகரை குறித்து கடும் தவம் இருந்தான். சந்திரனின் தவத்துக்கு மனம் மகிழ்ந்த விநாயகர் அருள்புரிந்து, தேயும் சந்திரன் வளர்வதற்கான வரத்தையும் கொடுத்தார். இப்படி சந்திரன் வரம் பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தி தினம் என்பதால், இன்று விரதம் இருப்பவர்கள் செய்யும் தவறுகளை மன்னித்து, நல்ல வழி காட்டுவார் கணபதி என்பது இந்த நாளின் சிறப்பு ஆகும்.

ஒவ்வொரு மாதமும் சங்கடஹரசதுர்த்தி வருகிறது. அன்று விரதம் இருந்து காரியத் தடைகளை நிவர்த்தி செய்து கொள்வோம். அதுமட்டுமன்றி, அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளுக்கும் இறைவனிடம் இருந்து மன்னிப்புப் பெறுவோம்.

சங்கடஹர சதுர்த்தி விரதம் இருக்கும் முறை
சங்கடஹர சதுர்த்தியன்று நாளன்று, விரதம் இருப்பவர்கள் அதிகாலை யில் எழுந்து நீராடி, விநாயகப்பெருமான் சிலை அல்லது படத்திற்கு விளக்கேற்றி விரதத்தை தொடங்க வேண்டும். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் விநாயகரை மனதில் நினைத்து விரதத்தைத் தொடங்கலாம்.  

மேலும் படிக்க | 12 ஆண்டுகளுக்குப் பின் குருவுடன் இணையும் சுக்கிரன்... இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள்!

விநாயகப்பெருமானை நினைத்து விரதத்தை தொடங்கி இருக்கும் எனக்கு எந்த இடையூறும் விரதம் நிறைவேற அருள் புரி எனா கடவுளை பிரார்த்தித்து, நாள் முழுவதும் உண்ணா நோன்பு இருந்து மாலையில் விநாயகரை அருகம்புல்லினால் பூஜிக்க வேண்டும். நாவல்பழம், கொய்யா, பேரிக்காய், கொழுக்கட்டை, சுண்டல் என உணவுப் பிரியர் கணபதிக்கு நிவேதனம் செய்யலாம். இரவில் சந்திரனை பார்த்து வணங்கிய பிறகு விநாயகருக்கு படைத்த பிரசாதங்களை மட்டும் இரவு உணவாக உட்கொள்ளலாம்.

உண்ணாவிரதம் இருக்க முடியாதவர்கள் பால், பழங்களை உண்டு விரதம் இருக்கலாம். கோவிலுக்கு சென்று விநாயகரை தரிசனம் செய்வது கூடுதல் பலனைத் தரும். விநாயகர் அகவல், விநாயகர் புராணத்தை படிப்பதும் நன்மைகளை தரும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது)

மேலும் படிக்க | இனிய நாளாக மலர்ந்த சோபகிருது ஆண்டு மாசி 16! யாருக்கு சுபம்? எவருக்கு கவனம் தேவை?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News