சுக்கிரனின் அருளால் ராஜபோக வாழ்க்கையை அனுபவிக்க போகும் ‘சில’ ராசிகள்!

Venus transit 2023: ஆடம்பரமான ராஜ போக வாழ்க்கையை அனுபவிக்க ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருப்பது அவசியம். இதனுடன், அவ்வப்போது நிகழும் சுக்கிரனின் ராசி மாற்றம் 12 ராசிகளின் வாழ்விலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 27, 2023, 05:07 PM IST
  • பண ஆதாயங்களினால் நிதி நிலை வலுவாகும்.
  • ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என்பதால், மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.
  • வாழ்க்கையில் வசதிகளும் வாய்ப்புகளும் பெருகும்.
சுக்கிரனின் அருளால் ராஜபோக வாழ்க்கையை அனுபவிக்க போகும் ‘சில’ ராசிகள்! title=

சுக்கிரன் கிரகம் உடல் சுகம், ஆடம்பரம், மகிழ்ச்சி, செல்வம், அன்பு, காதல், அழகு, ஈர்ப்பு மற்றும் புகழ் ஆகியவற்றை அளிக்கிறது. எனவேதான்ஆடம்பரமான ராஜ போக வாழ்க்கையை அனுபவிக்க ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருப்பது அவசியம். இதனுடன், அவ்வப்போது நிகழும் சுக்கிரனின் ராசி மாற்றம் 12 ராசிகளின் வாழ்விலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வரும் 6 ஏப்ரல் 2023 அன்று சுக்கிரன் தனது ராசியை மாற்றி ரிஷப ராசிக்குள் பிரவேசிக்க உள்ளார். சுக்கிரனின் சஞ்சாரம் மிகவும் முக்கியமானது. இது சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலனையும், சில ராசிகளுக்கு தீய விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷப ராசியில் நுழைவது மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கும். மாளவ்ய ராஜயோகம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்களைத் தரும்.

சுக்கிரன் சஞ்சாரம் 3 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்களைத் தரும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்:

மேஷம்:

சுக்கிரனின் சஞ்சாரத்தால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு பலமான பலன்களைத் தரும். எங்கிருந்தோ நிறைய பணம் கிடைக்கும். வாழ்க்கையில் வசதிகளும் வாய்ப்புகளும் பெருகும். அனைத்து விருப்பமும் நிறைவேறும். முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். அலுவலக பணியில், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பணத்தை சேமிப்பதிலும் வெற்றி பெறுவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கலாம். நிலவி வந்த நிதி நெருக்கடி நீங்கும். 

கடகம்: 

கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் பல வழிகளில் பலன்களை அள்ளித் தரும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என்பதால், மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் ஒரு புதிய வீடு-கார் அல்லது வேறு ஏதேனும் மதிப்புமிக்க பொருட்களை வாங்கலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற பல வாய்ப்புகள் உள்ளன. வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பணி நிமித்தமாக பயணம் செய்ய நேரிடலாம். 

மேலும் படிக்க | எச்சரிக்கை! 2025 மார்ச் வரை சனியின் பிடியில் சிக்கித் தவிக்க போகும் ‘ராசி’ இது தான்!

சிம்மம்: 

சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். தொழில் முன்னேற்றம் மற்றும் பண ஆதாயங்களின்  நிதி நிலை வலுவாகும். இவர்களின் வருமானம் கூடும். பணத்தை எல்லா வழிகளிலும் பெறலாம். உங்கள் நீண்ட நாள் கனவுகள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலைவும். வேலை மாறலாம். வியாபாரத்தில் புதிய வேலைகள் தொடங்கலாம். நீங்கள் சில நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மிடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மார்ச் 28 குரு அஸ்தமனம்: இந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News