டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்துவீச்சு தேர்வு!

சென்னையில் இன்று துவங்கும் IPL 2019 தொடரின் முதல் போட்டியை காண சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் திரளத் தொடங்கியுள்ளனர்!

Last Updated : Mar 23, 2019, 07:30 PM IST
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்துவீச்சு தேர்வு! title=

07:30 PM 23-03-2019
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.


சென்னையில் இன்று துவங்கும் IPL 2019 தொடரின் முதல் போட்டியை காண சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் திரளத் தொடங்கியுள்ளனர்!

சென்னை, பெங்களூரு அணிகள் மோதும் IPL-12 தொடரின் முதல் போட்டி இன்று இரவு நடைபெறுகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியினை காண ரசிகர்கள் உற்சாகத்துடன் குவிந்துள்ளனர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கும் IPL-12 தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது.

மகேந்திரசிங் தோனி தலைமையிலான அணியும், விராட் கோலி தலைமையிலான அணியும் மோதிக் கொள்வதால், IPL-12 தொடரின் தொடக்கமே அட்டகாசமாக அமைந்துள்ளதாகவே கருதப்படுகிறது.

இன்று இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டது, அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டன. இந்நிலையில் போட்டியினை காண இன்று பிற்பகல் முதலே மைதானத்திற்கு ரசிகர்கள் வரத் தொடங்கி விட்டனர். இதை ஒட்டி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் மைதானதை சுற்றி பாதுக்காப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். தீவிர சோதனைகளுக்குப் பின்னரே மைதானத்திற்குள் ரசிகர்கள் அனுமதிக்கப் படுகின்றனர். 

இந்த மைதானத்தில் கடைசியாக நடந்த 13 போட்டிகளில் சென்னை அணி 12 போட்டிகளில் வென்றுள்ளது. பெங்களூருவுக்கு எதிராக இங்கு நடந்த போட்டிகளிலும் 85% வெற்றியை சென்னை அணி பதிவு செய்துள்ளது. 

இதனால் இன்றைய போட்டியை வெற்றிக் கணக்குடன் சென்னை அணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News