IPL 2023: தோனியின் சரவெடி.. சேப்பாக்கத்தில் தொலைந்த பந்துகள்..! சம்பவம் இருக்கு

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியின்போது தோனி பந்துகளை சரமாரியாக அடித்து தொலைக்கும் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிவிட்டரில் வெளியிட்டுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 10, 2023, 07:09 PM IST
IPL 2023: தோனியின் சரவெடி.. சேப்பாக்கத்தில் தொலைந்த பந்துகள்..! சம்பவம் இருக்கு title=

ஐபிஎல் 2023 தொடருக்கு தயாராகும் வகையில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் தீவிர வலைப் பயிற்யில் ஈடுபட்டு வருகிறது. கேப்டன் தோனி தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார். இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்துவீச்சாளர்களை பந்துவீச வைத்து பேட்டிங் செய்கிறார். அப்போது, ஷாட்டுகளை தெறிக்கவிடும் தோனி, ஒவ்வொரு பந்துகளையும் மைதான எல்லைக்கோட்டு வெளியே அடித்து அசத்துகிறார். ஒவ்வொரு ஷாட்டும் இடிபோல விழுகிறது. அவர் பந்துகளை விளாசும் ஸ்டைலை பார்க்கும்போது ஒரு முடிவோடு தான் இந்த ஐபிஎல் தொடரை எதிர்கொள்ள காத்திருக்கிறார் என்பது தெரிகிறது.

மேலும் படிக்க | IPL2023: தோனி ஹூக்கா மிகவும் விரும்பி பிடிப்பார் - ஜார்ஜ் பெய்லி

அதிரடி ஷாட்டுகளை மட்டுமே அதிகம் பயிற்சி செய்கிறார். வேகப்பந்துவீச்சானாலும், சுழற்பந்துவீச்சானாலும் எல்லைக்கோட்டுக்கு வெளியே அடிப்பதை மட்டுமே தன்னுடைய பயிற்சியின் நோக்கமாக வைத்து இருக்கிறார். தோனி சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது. அதில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பந்தையும் இமாலய சிக்சர்களாக அடிக்கிறார் அவர். வித்தியாசமான பந்துகளை வீச வைத்து அதில் நேர்த்தியாக ஷாட்டுகளை ஆடி பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார் தோனி. இதனை பார்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் செம ஹேப்பியில் இருக்கின்றனர். இந்த ஆண்டு சாலா கப் நமதே என பையர் எல்லாம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஐபிஎல் 2023 தொடர் மார்ச் 31 ஆம் தேதி தொடங்குகிறது. அகமதாப்பாத்தில் தொடங்கும் இப்போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் களம் காண்கின்றன. இந்த முறை பழைய பன்னீர்செல்வமாக ஐபிஎல் தொடரில் ஆட்சி செய்ய வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் சென்னை அணி, அதற்கேற்ப ஏலத்தில் வீரர்களை குறி வைத்து தட்டி தூக்கியிருக்கிறது. அதில் மிக முக்கியமானவர் பென் ஸ்டோக்ஸ். இங்கிலாந்து அணியின் கேப்டனான அவர், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட இருக்கிறார். தோனிக்குப் பிறகு சிஎஸ்கே கேப்டன் பொறுப்பும் இவரிடம் ஒப்படைக்கும் பிளானுடன் சிஎஸ்கே பென் ஸ்டோக்ஸை எடுத்திருக்கிறது. இவரின் வருகை சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பலத்தை கொடுக்குமா? என்பது விரைவில் தொடங்கும் ஐபிஎல் தொடரில் தெரியவரும். 

மேலும் படிக்க |  No.1 T20 Cricket Premier League: உலகின் நம்பர்.1 டி20 கிரிக்கெட் பிரீமியர் லீக் எது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News