Ind Vs SL இரண்டாவது ஒரு நாள்: இந்திய அணி 'பேட்டிங்'

Last Updated : Dec 13, 2017, 11:13 AM IST
Ind Vs SL இரண்டாவது ஒரு நாள்: இந்திய அணி 'பேட்டிங்' title=

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மொஹாலி மைதானத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பவுலிங் தேர்வு செய்து உள்ளனர். அதன் படி இந்திய அணி முதலில் 'பேட்டிங்' செய்கிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 6 வார கால சுற்றுப்பயணத்தில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. 

இப்பயணத்தில், முன்னதாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் போட்டிகளில் இந்தியா 1-0 என்று கணக்கில் வெற்றிப் பெற்று தொடரை வென்றது. 

பின்னர் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் கடந்த டிசம்பர் 10-ம் தேதி அன்று இமாச்சல்பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் துவங்கியது. இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் கோலி ஓய்வில் இருந்ததால் ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா இலங்கை அணியை எதிர்த்து படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது முதல்நாள் போட்டி, பஞ்சாப் மொஹாலி மைதானத்தில் நடக்கிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பவுலிங் தேர்வு செய்து உள்ளனர்.

Trending News