ஐபிஎல் 2022 போட்டிகள் தள்ளிவைப்பா?

இந்தியாவில் ஓமிக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஐபிஎல் 2022 போட்டியை நடத்துவது பற்றி பிசிசிஐ, அணி உரிமையாளர்களுடன் விவாதிக்க உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Dec 23, 2021, 08:09 PM IST
  • ஐபிஎல் 2022 போட்டிகள் ஏப்ரல்/மே மாதங்களில் இந்தியாவில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
  • கடந்த முறை போல போட்டியின் போது ஏதேனும் அசம்பாவிதத்தைத் தவிர்க்க பிசிசிஐ தற்போதே வேறு திட்டங்களை யோசித்து வருகிறது.
ஐபிஎல் 2022 போட்டிகள் தள்ளிவைப்பா? title=

தற்போது இந்தியாவில் ஓமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது.  மார்ச் மாதம் வரை நிலைமை சரியாக வில்லை என்றால் என்ன செய்வது என்பது பற்றி பிசிசிஐ தற்போது விவாதித்து வருகிறது.  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அடுத்த மாதம் ஐபிஎல் அணி உரிமையாளர்களுடன் குழு கூட்டத்தை நடத்த வாய்ப்புள்ளது. இதில் இந்தியாவில் ஓமிக்ரான் தொற்று அதிகரிப்பு காரணமாக 2022 ஐபிஎல் போட்டிகளை எவ்வாறு நடத்துவது பற்றி பேச உள்ளது. 

ALSO READ | ஒமிக்ரான் பரவலால் இந்தியாவில் மீண்டும் ஊரடங்கா?

ஐபிஎல் 2022 போட்டிகள் ஏப்ரல்/மே மாதங்களில் இந்தியாவில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.  இந்த வருடம் ஏப்ரல் மாதம் இந்தியாவில் தொடங்கிய ஐபிஎல் 2021 போட்டிகள் கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்டு மீண்டும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றது.  அதனை தொடர்ந்து உலக கோப்பை போட்டிகளும் அங்கேயே நடத்தபட்டன.  ஐபிஎல் 2022 போட்டிகளையும் ஐக்கிய அமீரகத்தில் நடத்த பிசிசிஐ விரும்பவில்லை. 

இருப்பினும், கடந்த முறை போல போட்டியின் போது ஏதேனும் அசம்பாவிதத்தைத் தவிர்க்க பிசிசிஐ தற்போதே வேறு திட்டங்களை யோசித்து வருகிறது.  ஒருவேளை ஓமிக்ரான் நிலைமை மோசமடைந்தால், முழுப் போட்டியையும் மும்பை மற்றும் புனே அல்லது குஜராத் நகரங்களான அகமதாபாத், பரோடா மற்றும் ராஜ்கோட்டில் நடத்துவதற்கான யோசனையையும் ஆராய்ந்து வருகிறது பிசிசிஐ.

இதற்கிடையில், ஐபிஎல் 2022 மெகா ஏலத்தை பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் இரண்டு நாட்களுக்கு நடத்த பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. டெல்லி, கொச்சி, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்கள் ஏலத்திற்கான இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஹோட்டல்களின் இருப்பை சரிபார்த்த பிறகே இறுதி ஏலம் நடைபெறும் இடம் முடிவு செய்யப்படும்.  அகமதாபாத் மற்றும் லக்னோவைச் சேர்ந்த இரு அணிகளும் மெகா ஏலத்திற்கு முன் தங்கள் வீரர்களைத் தேர்ந்தெடுக்க உள்ளன.

ALSO READ | ஐபிஎல் 2022 ஏலம்: தேதிகளை நிர்ணயித்தது பிசிசிஐ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News