IPL 2019 Auction; 70 வீரர்களுக்கான தேடல் இன்று துவங்குகிறது!

IPL 2019-க்கான வீரர்கள் ஏலம் இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் துவங்குகிறது!

Last Updated : Dec 18, 2018, 10:56 AM IST
IPL 2019 Auction; 70 வீரர்களுக்கான தேடல் இன்று துவங்குகிறது! title=

IPL 2019-க்கான வீரர்கள் ஏலம் இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் துவங்குகிறது!

12-வது IPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடைபெறவுள்ளது. இதே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தலும் நடைபெற இருப்பதால் IPL 2019 போட்டி நடைபெறும் இடம், தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. 

இந்நிலையில் அடுத்த IPL 2019 தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று ஜெய்ப்பூரில் நடைப்பெறுகிறது. ஏலப்பட்டியலில் 346 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர், இப்பட்டியலில் இருந்து 70 வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

ஆஸ்திரேலிய நாட்டு வீரர்கள் மேக்ஸ்வெல், ஆரோன் பிஞ்ச் ஏற்கனவே ஏலத்தில் இருந்து விலகி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.36.20 கோடியையும், டெல்லி கேப்பிட்டல் அணி ரூ.25.50 கோடியையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20.95 கோடியையும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரூ.18.15 கோடியையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.15.20 கோடியையும், மும்பை இந்தியன்ஸ் அணி 11.15 கோடியையும், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி ரூ. 9.70 கோடியையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.8.40 கோடியையும் கொண்டு இன்று வீரர்களை வாங்க களத்தில் இறங்குகிறது.

IPL 2019-க்கான ஏலம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நடைப்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending News