நான் இந்தியாவுக்கு திரும்ப ஆடனும் - டெஸ்டில் முச்சதம் விளாசிய வீரரின் ஆசை

Karun Nair : டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் விளாசிய கருண் நாயர், தான் இந்திய கிரிக்கெட் அணிக்காக திரும்ப ஆட வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 29, 2024, 08:09 AM IST
  • இந்திய அணிக்காக மீண்டும் ஆட விருப்பம்
  • இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துவேன்
  • கருண் நாயர் லேட்டஸ்டாக கொடுத்திருக்கும் பேட்டி
நான் இந்தியாவுக்கு திரும்ப ஆடனும் - டெஸ்டில் முச்சதம் விளாசிய வீரரின் ஆசை title=

Karun Nair : இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஆடிய கருண் நாயர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் கம்பேக் கொடுக்க ஆசை இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் கவுண்டி மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் அண்மைக்காலமாக மிகச் சிறப்பாக ஆடி வருகிறார். அதனால் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைக்க முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

யார் இந்த கருண் நாயர்? 

கேரளாவை பூர்வீகமாக கொண்டிருக்கும் கருண் நாயர் பிறந்து எல்லாம் ராஜஸ்தான். உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விதர்பா அணிக்காக ஆடிக் கொண்டிருக்கிறார். பள்ளி பருவத்தில் இருந்தே கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கும் கருண் நாயர் பிரத்யேக பயிற்சி எடுக்க வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த குடும்பமும் ராஜஸ்தானில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு வந்தது. அங்கு பள்ளிப் படிப்புடன் தீவிர கிரிக்கெட் பயிற்சியும் செய்தார். இதனால் கோரமங்கலா கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கி படிப்படியாக உயர்ந்து இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பையும் பெற்றார். 

மேலும் படிக்க | ஐபிஎல் மெகா ஏலம்: எத்தனை வீரர்களை ஒரு அணி தக்கவைக்கலாம்? அஸ்வின் அடுக்கிய முக்கிய தகவல்கள்

இந்திய அணியில் கருண் நாயர்

2012 - 13 ஆம் ஆண்டில் கர்நாடகா அணிக்காக ரஞ்சி டிராபி விளையாடிய கருண் நாயர் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்கள் கவனத்தையும் ஈர்த்தார். இதனால் 2016 ஆம் ஆண்டு டி20, ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டி  என மூன்று வடிவங்களிலும் இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முத்திரை பதித்தார். மொஹாலி டெஸ்டில் சதமடித்த கருண் நாயர், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் முச்சதம் அடித்து சாதனை படைத்தார். அப்போட்டியில் 303 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். 

இந்திய அணியில் இருந்து நீக்கம்

ஆனால், அடுத்தடுத்த போட்டிகளில் சொதப்பியதால் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். அதன்பிறகு இந்திய அணிக்கு ஒருமுறைகூட தேர்வாகவில்லை. இருப்பினும் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து கவனம் செலுத்திய கருண் நாயர், இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம், சதம் என வரிசையாக விளாசிய அவர், இந்தியாவில் நடைபெற்ற உள்நாட்டு டி20 போட்டிகளிலும் கலந்து கொண்டு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்திய அணிக்கு திரும்ப ஆசை

இதனால் மீண்டும் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார் கருண் நாயர். இது குறித்து அவர் பேசும்போது, "ஒரு பேட்ஸ்மேனாக இங்கிலாந்தில் இந்திய வீரர்கள் ரன் குவிப்பது சவாலான விஷயம். ஆனால் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தேன். அங்கு நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். இப்போது எனக்கே என்மீது மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. அதனால் இந்திய அணிக்காக என்னால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என உறுதியாக நம்புகிறேன். மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்வேன்" என்றும் கருண் நாயர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க  | மும்பையின் முன்னாள் வீரருக்கு வலைவீச்சு - லக்னோ அணி கொடுக்கும் பெரிய பொறுப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News