KL ராகுல், பாண்டியா விவகாரத்தில் மௌனம் கலைத்தார் கோலி!

பெண்கள் குறித்து KL ராகுல் மற்றும் பாண்டியா பேசியது அவர்களின் தனிப்பட்ட கருத்து என கிரிக்கெட் அணி கேப்டன் கோலி தெரிவித்தார்!

Last Updated : Jan 11, 2019, 12:05 PM IST
KL ராகுல், பாண்டியா விவகாரத்தில் மௌனம் கலைத்தார் கோலி! title=

பெண்கள் குறித்து KL ராகுல் மற்றும் பாண்டியா பேசியது அவர்களின் தனிப்பட்ட கருத்து என கிரிக்கெட் அணி கேப்டன் கோலி தெரிவித்தார்!

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சமீபத்தில் ஒளிப்பரப்பான பேட்டியின்போது  இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்த்திக் பாண்டியா, KL ராகுல் ஆகியோர் பெண்கள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கிரிக்கெட் வாரியம் விளக்கம் கேட்டு இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியது. 

இதையடுத்து ஹர்த்திக் பாண்டியா தனது கருத்திற்காக மன்னிப்பு கேட்டார். எனினும் இருவர் மீதும் கிரிக்கெட் வாரிய நிர்வாகக் குழு அதிருப்தியில் உள்ளது. குறைந்தபட்சம் 2 போட்டியில் விளையாட அவர்களுக்கு தடை விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியானது.

ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நாளை சிட்னியில் தொடங்குகிறது. இந்த போட்டிகளில் இருந்து இருவரும் நீக்கப் படலாம் என தகவல்கள் வெளியான நிலையில் இன்று இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணி கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது, பெண்கள் குறித்து லோகேஷ் ராகுல், ஹர்த்திக் பாண்டியா ஆகியோரின் கருத்து, அவர்களின் தனிப்பட்ட கருத்து. கிரிக்கெட் வாரியத்திற்கும் வீரர்களுக்கும் அதில் தொடர்பு இல்லை என குறிப்பிட்டார். மேலும், இந்த விஷயத்தில் கிரிக்கெட் வாரியத்தின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் கோலி தெரிவித்தார்.

ஒருவேலை அணியில் மாற்றம் ஏற்பட்டாலும், நமது நம்பிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது. கிரிக்கெட் வாரியம் தனது முடிவை அறிவித்தபிறகு, யாரை அணியில்  சேர்ப்பது என்பது பற்றி சிந்திக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Trending News