ODI ஒரு நாள் போட்டி அட்டவணையில் மீண்டும் மாற்றம்? பாகிஸ்தான் போட்டிக்கு பாதுகாப்பு பிரச்சனை!

ODI World Cup:பாதுகாப்பை காரணம் காட்டி பாகிஸ்தான் பங்கேற்கும் தொடர்ச்சியான ஆட்டங்களுக்கு இடையேயான இடைவெளியை பிசிசிஐ-யிடம் ஹைதராபாத் கேட்டுள்ளது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 20, 2023, 02:25 PM IST
  • தொடர்ச்சியான ஆட்டங்களுக்கு இடைவெளி தேவை
  • பிசிசிஐக்கு கோரிக்கை வைத்த ஹைதராபாத் போலீஸ்
  • மீண்டும் அட்டவணையில் மாற்றம் சாத்தியமா?
ODI ஒரு நாள் போட்டி அட்டவணையில் மீண்டும் மாற்றம்? பாகிஸ்தான் போட்டிக்கு பாதுகாப்பு பிரச்சனை! title=

புதுடெல்லி: ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் தேதிகளில் மீண்டும் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. தொடர்ச்சியான நாட்களில் போட்டிகளை நடத்துவதில் பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால், பாகிஸ்தான் பங்கேற்கும் தொடர்ச்சியான ஆட்டங்களுக்கு இடையில் இடைவெளி தேவை என்று ஹைதராபாத் காவல்துறை  பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக, பாகிஸ்தான்-இலங்கை போட்டி அக்டோபர் 12-ம் தேதிக்கு திட்டமிடப்பட்டது, ஆனால் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டதால் ஹைதராபாத் அணி தற்போது பிரச்சனை இருப்பதாக சொல்கிறது.

அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி போட்டியின் தொடக்க ஆட்டமும், நவம்பர் 19ஆம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறுகிறது. 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ICC ODI உலகக் கோப்பை  2023 அட்டவணை, பல்வேறு காரணங்களுக்காக தொடர்ந்து கவனத்தில் உள்ளது. மிகவும் தாமதத்திற்குப் பிறகு அறிவிக்கப்பட்ட அட்டவணையில் ஏற்கனவே சில மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில், இப்போது ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் (HCA) மேலும் ஒரு மாற்றத்தை கோரியுள்ளது.  

திருத்தப்பட்ட அட்டவணைக்குப் பிறகு உப்பலில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இரண்டு ஆட்டங்கள், அதாவது அக்டோபர் 9-ம் தேதி நியூசிலாந்து vs நெதர்லாந்து மற்றும் அக்டோபர் 10-ம் தேதி பாகிஸ்தான் vs இலங்கை இடையிலான போட்டிகள் நடைபெற உள்ளன.

மேலும் படிக்க | IND vs IRE: வெற்றியை தொடர இந்த வீரரை வெளியே அனுப்ப திட்டமிடும் இந்திய அணி?

இந்த நிலையில், HCA இப்போது கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. அதன்படி, இரண்டு போட்டிகளை நடத்த இடைவெளி தேவை என்று ஹைதராபாத் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 

அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டிகளுக்கான அட்டவணை 100 நாட்களுக்கு முன்பு அதாவது முதலில் ஜூன் 28 அன்று வெளியிடப்பட்டது. விளையாட்டு நேரத்தில். சில போட்டிகளின்போது, பண்டிகை நாட்கள் வந்ததால், அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டது.

இதேபோல, ஐசிசி உலகக் கோப்பை 2023ல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா vs பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 15 ஆம் தேதிக்குப் பதிலாக அக்டோபர் 14 ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டது. அதேபோல, 

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் தேதியை நவம்பர் 12 முதல் 11 ஆம் தேதிக்கு மாற்றுமாறு வங்காள கிரிக்கெட் சங்கம் (Cricket Association of Bengal (CAB)) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (Board of Control for Cricket in India (BCCI)) கோரிக்கை விடுத்ததை அடுத்து அந்த ஆட்டம் நவம்பர் 11க்கு மாற்றப்பட்டது.

மேலும் படிக்க |சஞ்சு சாம்சனின் நிகர சொத்து மதிப்பு இவ்வளவா... முழு தகவல் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News