திருச்சி விமான நிலையத்தில் டிடிவி ஆதரவாளர்கள் கைது!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்ட டிடிவி ஆதரவாளர்கள் கைது!

Last Updated : Apr 3, 2018, 03:12 PM IST
திருச்சி விமான நிலையத்தில் டிடிவி ஆதரவாளர்கள் கைது! title=

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்ட டிடிவி ஆதரவாளர்கள் கைது!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, திருச்சி விமான நிலையத்தை விவசாயிகளுடன் சேர்ந்து முற்றுகையிட முயன்ற டிடிவி தினகரன் தரப்பினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

தமிழக விவசாய அமைப்புகள் காவிரி விவகாரம் தொடர்பாக திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட முடிவு செய்தன. இதற்கு ஆதரவு தெரிவித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி போராட்டத்தில் பங்கேற்றார். 

டிடிவி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலரும் விமான நிலையத்தை முற்றுகையிட முயன்றபோது, அவர்களை காவல்துறையினர் தடுத்ததால், கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் டிடிவி மற்றும் அவரது ஆதரவாளர்கள், விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

Trending News