தனது 2 குழந்தைகளை இழந்த விஜய்க்கு நேரில் ஆறுதல் கூறிய ரஜினிகாந்த்

தனது இரண்டு குழந்தைகளை பறிகொடுத்து மன உளைச்சலில் இருக்கும் விஜய்யை அழைத்து ரஜினி நேரில் ஆறுதல் கூறினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 5, 2018, 08:46 PM IST
தனது 2 குழந்தைகளை இழந்த விஜய்க்கு நேரில் ஆறுதல் கூறிய ரஜினிகாந்த் title=

சென்னை குன்றத்தூரை சேர்ந்த அபிராமி என்ற பெண், தன் கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் கணவரை கொலை செய்ய கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டம் தீட்னார். மூன்று பேருக்கும் விஷம் கலந்த உணவை கொடுத்தாள். இதில் கணவர் அதிர்ஷ்டவசமாக தப்பித்தார். ஆனால் இரண்டு குழந்தைகளும் மரணம் அடைந்தன. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு மற்றும் சோகத்தை ஏற்படுத்தியது.

தற்போது அபிராமி போலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஆனாலும் அவரது கணவர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளார். அவருக்கு பல பேர் அறுதல் கூறி வருகின்றனர். இவர் ரஜினி ரசிகர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள், மிகுந்த துன்பத்தில் இருக்கும் விஜயை அழைத்து நேரில் ஆறுதல் கூறினார். 

 

 

Trending News