அரசு மரியாதையுடன் நடிகர் விவேக் உடல் தகனம்: தமிழக அரசு

சமூக பொறுப்பு, அரசின் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு நடிகர் விவேக் முன்னின்று எடுத்த முயற்சிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில், மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 17, 2021, 04:12 PM IST
  • நடிகர் விவேக்கின் மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளனர்.
  • நடிகர் விவேக்குக்கு கவுரவம் அளிக்கும் விதமாக அவரது இறுதிச் சடங்கின்போது காவல்துறை மரியாதை அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
அரசு மரியாதையுடன் நடிகர் விவேக் உடல் தகனம்: தமிழக அரசு title=

சிரிப்போடு சேர்த்து சிந்தனையையும் ஊட்டிய நடிகர் விவேக், இன்று அதிகாலை அவர், அனைவரையும் மீளாத் துயரில் மூழ்கடித்து விட்டு இறந்து விட்டார்.  

தமிழ் திரையுலகில் சின்ன கலைவாணர் என அன்புடன் அழைக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் இன்று நம்முடன் இல்லை. திரையுலக பிரபலங்கள் உட்பட பலர், அதிர்ச்சியையும் வேதனையையும் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் விவேக்கின் மறைவுக்கு,  பிரதமர் நரேந்திர மோடியும் (PM Narendra Modi), உள்துறை அமைச்சர் அமித் ஷாவும்  இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளனர்.

இந்நிலையில்,  நடிகர் விவேக்குக்கு கவுரவம் அளிக்கும் விதமாக அவரது இறுதிச் சடங்கின்போது காவல்துறை மரியாதை அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

முன்னதாக, இது தொடர்பாக தமிழக அரசு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையம் அனுமதி அளித்ததை அடுத்து அவரது உடல் காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ALSO READ |  நிழலும், நிஜத்திலும் சமூகத்தின் மீது அக்கறை காட்டியவர் நடிகர் விவேக்: பிரதமர் மோடி

நடிகர் விவேக் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பிஜே. அப்துல் கலாம் மீது மிகுந்த மரியாதையும் பற்றும் கொண்டவர். அவரது அறிவுரைகளை நிஜ வாழ்க்கையில் கடை பிடித்தவர். 

அப்துல்கலாம் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில்,  ஒருகோடி மரம் நடும் இயக்கத்தை தமிழகம் முழுவதும் கொண்டுச் சென்றதோடு மட்டுமல்லாமல், இதுவரை 33.5 லட்சம் மரக் கன்றுகளை நட்டதோடு மட்டுமால்லாமல் இளைஞர்களையும் அவ்வாறு செய்ய ஊக்குவித்து வந்தார். 

சமூக பொறுப்பு, அரசின் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு நடிகர் விவேக் முன்னின்று எடுத்த முயற்சிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில், மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 

சுமார் 10 வருடம் முன்னால், மகனை இழந்த அவர், அதனால் மிகவும் மனம் ஒடிந்து போனார். ஆனாலும், அவர் தொடர்ந்து மரம் நடுவதில் கவனம் செலுத்தி வந்தார். அவர் நட்ட ஓவ்வொரு மரமும் அவரின் சமூக பொறுப்புணர்ச்சி மற்றும் அக்கறைக்கு சாட்சியாக நிற்கிறது.

ALSO READ | நடிகர் விவேக் தனது அற்புத திறமையால் இந்திய சினிமாவை சிறப்படைய செய்தவர்: அமித் ஷா

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News