பேராபத்து.. அணைகளை பாதுகாப்பதில் அலட்சியம் காட்டும் அதிமுக -ஸ்டாலின் தாக்கு

ஒவ்வொன்றாக உடைந்து வருவது அணைகள் முன் கூட்டியே சீரமைக்கத் தவறிய அ.தி.மு.க அரசு என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 23, 2018, 06:37 PM IST
பேராபத்து.. அணைகளை பாதுகாப்பதில் அலட்சியம் காட்டும் அதிமுக -ஸ்டாலின் தாக்கு title=

ஒவ்வொன்றாக உடைந்து வருவது அணைகள் முன் கூட்டியே சீரமைக்கத் தவறிய அ.தி.மு.க அரசு என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். 

திருச்சி முக்கொம்பு அணையின் 8 மதகுகள் உடைந்து அணைக்கு பேராபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு திருச்சி - கரூர் சாலையில் உள்ள முக்கொம்பு மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் முசிறி - நாமக்கல் செல்லும் சாலையை பயன்படுத்த முடியாத மோசமான நிலை உருவாகியிருக்கிறது.

கொள்ளிடம் பாலம், தற்போது முக்கொம்பு மேலணை என்று ஒவ்வொன்றாக உடைந்து வருவது அணைகள் பாதுகாப்பு விஷயத்தில் அ.தி.மு.க அரசின் அக்கறையின்மையையும், அலட்சியத்தையும் காட்டுகிறது.

அணைகள் சீரமைப்புத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கிச் செலவிடுகிறோம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அ.தி.மு.க அரசு, இந்த அணைகளின் பாதுகாப்பு குறித்து முன்கூட்டியே ஆய்வு செய்து கணித்திடத் தவறியது ஏன்?

அணை சீரமைப்புப் பணிகளின் கீழ் முக்கொம்பு அணை மற்றும் கொள்ளிடம் பாலத்தின் தூண்களை முன் கூட்டியே சீரமைக்கத் தவறிய அ.தி.மு.க அரசே இந்த பாதிப்புகளுக்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும்.

Trending News