’விழுப்புரத்தில் நிகழ்ந்த கொடூரம்’ ஒரே இரவில் 2 கொலை, 5 இடங்களில் கொள்ளை

விழுப்புரத்தில் ஒரே இரவில் 2 கொலை மற்றும் 5 இடங்களில் கொள்ளையடித்த முகமூடி கொள்ளையர்களால் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 7, 2021, 03:33 PM IST
’விழுப்புரத்தில் நிகழ்ந்த கொடூரம்’ ஒரே இரவில் 2 கொலை, 5 இடங்களில் கொள்ளை title=

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தை அடுத்த களித்திரம்பட்டு கிராமத்தில் நேற்றிரவு முகமூடிக்கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். முதலில், கூலித் தொழிலாளி மாயவன் என்பவரது ஓட்டு வீட்டின் கதவை உடைத்த அவர்கள், வீட்டினுள் உறங்கிக்கொண்டிருந்த மாயவனை தடியால் அடித்து வீட்டில் இருந்த பொருட்களை மிரட்டி எடுத்துச் சென்றுள்ளனர். அதேபகுதியில் இருந்த டெய்லர் கடைக்குள் புகுந்து, அங்கு தூங்கிக் கொண்டிருந்தவர்களையும் தாக்கி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

ALSO READ | ’சொடக்கு மேல சொடக்கு போடுது’ நடனமாடி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்..!

பின்னர், அந்த ஊரின் மாரியம்மன் கோவிலுக்கு சென்ற முகமூடி கொள்ளையர்கள், கோவிலின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். அவர்களின் திட்டம் பலிக்காததால் முயற்சியை கைவிட்டனர். கண்டச்சாவடி பகுதியில் ஓட்டு வீட்டிற்குள் புகுந்த அவர்கள், தூங்கிக் கொண்டிருந்த தாய் மற்றும் மகளை கட்டையால் அடித்துக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்த பொருட்களை சுருட்டிச் சென்றுள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள், உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், கொலை செய்யப்பட்டுக் கிடந்த தாய் மற்றும் மகளின் உடலை எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, ஒரே இரவில் சங்கிலித் தொடராக 5 இடங்களில் கொள்ளை மற்றும் கொலை நடந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து, 6 தனிப்படைகள் அமைத்துள்ள விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர், சங்கிலித் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட முகமூடிக் கொள்ளையர்களை பிடிக்க தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். 

ALSO READ | ஆட்சியர் அலுவலகத்திற்கு டீசல் கேனுடன் வந்த தம்பதியினரால் பரபரப்பு!

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற இந்தக் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் கொள்ளையர்களா? அல்லது வெளிமாநிலக் கொள்ளையர்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Telegram Link: https://t.me/ZeeNewsTamil

Trending News