ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட மக்களுக்கு சிம்பு அழைப்பு

Last Updated : Jan 11, 2017, 06:51 PM IST
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட மக்களுக்கு சிம்பு அழைப்பு title=

ஜல்லிக்கட்டுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் சிம்பு இன்று தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்பொழுது அவர் கூறியதாவது:-

 தமிழை தாய்மொழியாக கொண்டதில் பெருமை அடைகிறேன். தமிழில் ஐந்தாம் வகுப்பு வரை 99 மதிப்பெண்கள் எடுத்தேன். நான் முதலில் தமிழன், பிறகுதான் நான் இந்தியன். தமிழர்களுக்கு ஏகப்பட்ட பிரச்னை இருக்கிறது. 

தமிழர்களுக்கு உணர்வு இல்லை. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசும் அறுகதை எனக்கு உள்ளது. இன்று கூட நான் பேசாவிட்டால் என்றுதான் பேசுவது. இதுவரை வெளியில் அடித்தீர்கள். இப்போது என் வீட்டுக்குள்ளேயே வந்து எனது கலாசாரத்தின் மீது கை வைத்து அடிக்கிறீர்கள். இதை பொறுத்துக்கொள்ள முடியுமா?

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தனித்தனியாக போராடுவதால் பலன் கிடைக்காது. உங்களுக்காக நான் ஒரு யோசனை சொல்கிறேன். நாளை 12ம் தேதி மாலை 5 மணிக்கு என் வீட்டு வாசலில் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தப்போகிறேன். 10 நிமிடமும் நான் வாயே திறக்கப்போவதில்லை. மவுனமாக நிற்கப்போகிறேன். அதேபோல தமிழகத்திலுள்ள எல்லா மக்களும், எந்த துறையில் வேலை பார்ப்பவர்களாக இருந்தாலும், மாலை 5 மணிக்கு 10 நிமிடங்களுக்கு கருப்பு சட்டை அணிந்து வீட்டை விட்டு வெளியே வந்து மவுனமாக நிற்கவும். நாளை நான் போராட்டம் நடத்தும்போது, என்னை முடிந்தால் போலீசார் கைது செய்யட்டும். முடிந்தால் என்னை தடியடி நடத்தி கலையுங்கள். எல்லோரும் என்னைப்போலவே, பிறருக்கு தொந்தரவு கொடுக்காமல் அப்படியே 10 நிமிடங்கள் நில்லுங்கள்.

தமிழர்கள் அநாதை இல்லை என்று காண்பிக்க திரளுங்கள். எனது வீட்டுக்கு முன்பு நின்று போராட்டம் நடத்த வருவோர் வரலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

நான் போராட்டம் நடத்தினால் அரசியலுக்கு வருவதாக கூறிவிடுவார்கள். நான் அரசியல்வாதி கிடையாது. நான் ஒரு நடிகன் தான்.

Trending News