Chennai COVID: 20% சென்னைவாசிகள் ஒரு டோஸ் கோவிட் தடுப்பூசி போட்டவர்கள்

தடுப்பூசிப் பற்றாக்குறையால் இன்று (2021, ஜூன் 02), 5996 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது.  தடுப்பூசி போடத் தொடங்கியதில் இருந்து சென்னையில் இன்றுதான் மிகவும் குறைந்த அளவு தடுப்பூசி போடப்பட்டுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 2, 2021, 10:30 PM IST
  • 20% சென்னைவாசிகள் ஒரு டோஸ் கோவிட் தடுப்பூசி போட்டவர்கள்
  • 6 சதவீதத்தினர் இரு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டுள்ளனர்
  • தடுப்பூசிப் பற்றாக்குறையால் இன்று 5996 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது
Chennai  COVID: 20% சென்னைவாசிகள் ஒரு டோஸ் கோவிட் தடுப்பூசி போட்டவர்கள் title=

சென்னை: சென்னையின் மக்கள்தொகையில் சுமார் 20 சதவீதம் பேர் குறைந்தது ஒரு டோஸ் கோவிட் -19 தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளனர், 6 சதவீதத்தினர் இரு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டுள்ளனர். 

சென்னையில் 80 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். சென்னை கார்ப்பரேஷன் வெளியிட்ட தரவுகளின்படி, திங்கள்கிழமை வரை, நகரில் 20,23,145 நபர்களுக்கு தடுப்பூசி (முதல் மற்றும் இரண்டாம் தடுப்பூசி) போடப்பட்டுள்ளது. இது நகரின் மொத்த மக்கள்த் தொகையில் 20 சதவீதமாகும்.

இவர்களில் 14,47,392 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 5,75,753 பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

இதில் 2,659 மாற்றுத்திறனாளிகளும் அடங்குவார்கள். அவர்களில் 195 பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியும், 2464 பேருக்கு முதல் டோஸ் மட்டும் போடப்பட்டுள்ளது. வழங்கப்பட்டது.

Also Read | தமிழ்நாட்டில் COVID-19 பரவல் வேகம் குறைகிறது

தடுப்பூசிப் பற்றாக்குறையால் செவ்வாயன்று (2021, ஜூன் 02), 5996 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. இதனால், 18-45 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கள் இடைநிறுத்தப்பட்டன.  

திங்களன்று, இது 10,325 பேருக்கு தடுப்பூசி போட்டது, ஞாயிற்றுக்கிழமை இந்த எண்ணிக்கை 7834 ஆக இருந்தது. சென்னை கார்ப்பரேஷன் நாள்தோறும் சராசரியாக 25,000 முதல் 35,000 பேருக்கு தடுப்பூசிகளைப் போடுகிறது. தடுப்பூசி இயக்கம் தொடங்கியபோது, நாளொன்றுக்கு 50,000 முதல் 60,000 நபர்களுக்கு தடுப்பூசிகளை போட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

தற்போது செய்தித்தாள் விநியோகஸ்தர்கள், பால் சப்ளையர்கள், சாலையோர விற்பனையாளர்கள், மளிகை கடைகள் மற்றும் மருந்தகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், ஆட்டோ, கார் மற்றும் பஸ் டிரைவர்கள், மின்சார வாரிய ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள், அரசு ஊழியர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், அத்தியாவசிய தொழில்களில் பணிபுரிபவர்கள், ஆசிரியர்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில், போக்குவரத்து துறை ஊழியர்கள், கப்பல்கள் மற்றும் விமான நிறுவனங்களில் பணிபுரியும் 18-45 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு சென்னையில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

Also Read | History June 02: இரண்டாம் எலிசபெத்துக்கு முடிசூட்டப்பட்டது மற்றும் பல… 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News