"தமிழ்நாடு" பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் - முதல்வர் அறிவிப்பு!

தமிழ்நாடு என பெயர்சூட்டப்பட்டு 50 ஆண்டுகளை எட்டிய நிலையில், "தமிழ்நாடு" பொன்விழா ஆண்டு கொண்டாடப்படும் என முதல்வர் அறிவிப்பு!

Last Updated : Jan 11, 2018, 01:35 PM IST
"தமிழ்நாடு" பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் - முதல்வர் அறிவிப்பு! title=

தமிழ்நாடு என பெயர்சூட்டப்பட்டு 50 ஆண்டுகளை எட்டிய நிலையில், "தமிழ்நாடு" பொன்விழா ஆண்டு கொண்டாடப்படும் என முதல்வர் அறிவிப்பு!

தமிழக சட்டமன்றத்தின் இன்றைய கூட்டத்தொடரில், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ், நமது மாநிலம் "தமிழ்நாடு" என்று பெயரோடு 50-வது ஆண்டில் காலடி எடுத்து வைப்பதை முன்னிட்டு "தமிழ்நாடு" பொன்விழா ஆண்டு கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார்.

முன்னதாக நேற்றைய கூட்டத்தொடரில், எம்.எல்.ஏ -களின் ஊதிய உயர்வு மசோதா தாக்கல் செய்யப்பட்டது, இந்த மசோதாவிற்கு எதிர்பு தெரிவித்து திமுக-வினர் வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்ககது!

கடந்த ஜன., 8 ஆம் நாள் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் நாளை வரை இக்கூட்டத்தொடர் நடைப்பெறவுள்ளது. 

Trending News