சவுக்கு சங்கர் மீது பாஜக சார்பில் திருச்சி எஸ் பி அலுவலகத்தில் புகார்

முத்துராமலிங்க தேவர் மற்றும் முக்குலத்தோரை இழிவுபடுத்தி பேசிய  சவுக்கு சங்கர் மீது பாஜக சார்பில் திருச்சி எஸ் பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : May 23, 2024, 03:54 PM IST
  • முக்குலத்தோர் சமூகத்தினரை இழிவாக பேசிய விவகாரம்.
  • சவுக்கு சங்கர் மீது புகார் அளித்த பாஜக.
  • பாஜக சார்பில் திருச்சி எஸ் பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சவுக்கு சங்கர் மீது பாஜக சார்பில் திருச்சி எஸ் பி அலுவலகத்தில் புகார் title=

சமூக வலைதளமான யூடியூபில் முக்குலத்தோர் சமூகத்தினையும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையும் அவமானப்படுத்தும் விதமாகவும், முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் எந்த வேலைக்கு செல்லாமல் குடிபோதையில் இருப்பதாகவும், குற்ற பின்னணி உடையவர்களான அச்சமுகத்தைச் சேர்ந்த இளைஞர்களை எந்த ஒரு நிறுவனமும் வேலைக்கு சேர்க்க மறுப்பதாகவும், தேவர் ஜெயந்தியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சாதி கலவரத்தை தூண்டும் விதத்தில் இழிவான கருத்துக்களை பேசி சவுக்கு சங்கர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு இருப்பது முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் சவுக்கு சங்கர் மீதும், சவுக்கு யூடியூப் சேனல் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி ஓபிசி சார்பில், மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சூர்யா சிவா கூறுகையில், ‘பெண் காவலர்களையும் பெண்களையும் இழிவாக பேசியதற்காக தமிழகம் முழுவதும் இருந்து 35 புகார்கள் காவல்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது, முக்குலத்தோர் சமூகத்தை பற்றி இழிவாக பேசியதற்காக கோவையில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தலைவர்கள் புகழை பாதுகாப்பது ஓபிசி அணியின் கடமை என்பதால் சவுக்கு சங்கர் மீது தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் நேர்மையான அதிகாரி, ஆனால் சவுக்கு சந்தர்ப்ப பல இடங்களில் பகையை சம்பாதித்துள்ளார். எடப்பாடியின் கைக்கூலியாக செயல்பட்டு விமர்சனங்களை பெற்றுள்ளார், எடப்பாடி குறித்து எத்தனை வீடியோக்களை பதிவு செய்து வைத்துள்ளார் என்பது கூட தெரியாது.

மேலும் படிக்க | பெளர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் தள்ளுமுள்ளு.. ரயிலில் பரபரப்பு

கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி உடன் நீண்ட நாள் சவுக்கு சங்கர் பயணித்து இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது, கொடநாடு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கனகராஜ் மரணத்தில் காரை ஓட்டி வந்த மல்லிகா நல்லுசாமி சவுக்கு சங்கரின் நண்பர், இந்த வழக்கு விசாரணை தொடர்பாக பலவற்றை ஆப் செய்துள்ளனர். 

எடப்பாடி பழனிச்சாமி உடன் நீண்ட நாள் பயணித்து இருப்பதால் எடப்பாடி குறித்த ரகசியங்கள் அறிந்திருப்பதால் சவுக்கு சங்கர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது, அதே நேரம் சிறையில் கைதிகள் உயிரிழந்தது தொடர்பாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ டிவி சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது என்பது சவுக்கு சங்கர் உயிர் மீது அச்சுறுத்தல் ஏற்படுத்துகிறது. மேலும் தேவர் ஜெயந்தியின் போது அரபி உதயகுமார் மற்றும் தனது எஜமான் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை இழிவுசெய்த சமூகத்தை இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காக சவுக்கு சங்கர் இவ்வாறு செயல்படுவதாகவும் சூர்யா சிவா குற்றம் சாட்டினார்.

மேலும் படிக்க | மே 25இல் உருவாகும் புதிய புயல்... வங்கக் கடலில் வலுவடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி - பாதிப்பு இருக்குமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News