மிக்ஜாம் புயல்: 7 மாவட்டங்களில் மிக கனமழையோடு 70 கிமீ வேகத்தில் தரைக்காற்று வீசும்..!

மிக்ஜாம் புயல் சென்னையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் சென்னை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.    

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 2, 2023, 03:36 PM IST
  • சென்னையை நோக்கி வரும் மிக்ஜாங் புயல்
  • 16 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை
  • திருவள்ளூர் மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை
மிக்ஜாம் புயல்: 7 மாவட்டங்களில் மிக கனமழையோடு 70 கிமீ வேகத்தில் தரைக்காற்று வீசும்..! title=

வங்க கடலில் நிலைக் கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. டிசம்பர் 3 ஆம் தேதியான ஞாயிற்றுக் கிழமை சென்னை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக சென்னையை ஒட்டி இருக்கும் தமிழகத்தின் 7 வட கடலோர மாவட்டங்களில் மிக அதிகமான கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் மிக்ஜாங் புயல் வலுப்பெற்ற பிறகு டிசம்பர் 4 ஆம் தேதி மிக கன மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இதனையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு டிசம்பர் 4 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மிக கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்!

திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், 

மேலும் படிக்க | மிக்ஜாம் புயல்: 200 மிமீ மழை கொட்டப்போகுது.. வர்தா, கஜா போல் இருக்குமா? வெதர்மேன் அப்டேட்

கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்!

வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, 

மிக்ஜாங் புயல் குறித்த லேட்டஸ்ட் தகவல்கள்

- மிக்ஜாங் புயல் சென்னைக்கு 450 கி.மீ தொலைவில் கிழக்கு - தென்கிழக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது

- வங்க கடலில் நிலை கொண்டுள்ள இது, டிசம்பர் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை புயலாக வலுப்பெறும்

- தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வட கடலோர மாவட்டங்கள், ஒரு சில உள் மாவட்டங்களில் மழை பெய்யும்

- டிசம்பர் 4ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

- கடலோர மாவட்டங்களில் 70 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்

-  3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்

- சென்னையை பொறுத்தவரையில் நீர்நிலை வழித்தடங்களான மணலி சடையங்குப்பம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்.  மாற்றுப் பாதையில் செல்ல வாகன ஓட்டிகளுக்குப் போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தல்

- செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் நீர்நிலை கொள்ளளவு எட்டியுள்ளதால், உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்படுவதால் நீர்நிலை வழித்தடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது

- இருப்பினும் புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாக சென்னை மேயர் பிரியா ராஜன் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | புயலை எதிர்கொள்ள தயார், 5 பேர் இதுவரை உயிரிழப்பு.... மக்களே கவனம் - அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News