சீரியல் சப்தத்தில் பெண்கள் சமையல்..! பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய திருடர்கள்

காஞ்சிபுரம் மாமல்லன் நகர் அருகே மாருதி நகரில் பட்ட பகலில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 24, 2021, 10:44 AM IST
சீரியல் சப்தத்தில் பெண்கள் சமையல்..! பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய திருடர்கள் title=

காஞ்சிபுரம் மாமல்லன் நகர் அருகே மாருதி நகரை சேர்ந்தவர் மேகநாதன். சென்னை உள்ளாட்சி நிதித் துறை அலுவலகத்தில் துணை ஆய்வாளர். இவரது சகோதரர்கள் சீனிவாசன், மணிகண்டன் ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசிக்கின்றனர். இதில் சீனிவாசன், காஞ்சிபுரம் வணிகர் வீதியில் டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையம் நடத்தி வருகிறார். மணிகண்டன் வேளாண் துறை கண்காணிப்பாளராக உள்ளார்.

நேற்று காலை சகோதரர்கள் 3 பேரும், வேலைக்கு சென்றனர். அவர்களது மனைவிகள் 3 பேரும் வீட்டில் இருந்தனர். மதியம் 2 மணியளவில், திடீரென மேகநாதன் வீட்டுக்குள் முகமூடி அணிந்து கொண்டு 4 பேர், கத்தியுடன் நுழைந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண்கள், அலறி கூச்சலிட்டனர். உடனே அவர்கள், கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். சத்தம் போட்டால் குத்தி கொலை செய்து விடுவோம் என மிரட்டி இதையடுத்து அவர்களும் வேறு வழி இல்லாமல் அமைதியாக இருந்துள்ளனர்.

ALSO READ | பணப்பை என நினைத்து வங்கி ஊழியரின் உணவுப்பையை திருடிய நபர்!

அவர்களது கை கால்களை கட்டிப்போட்டும் கழுத்தில் அணிந்திருந்த நகைகள் உட்பட வீட்டில் இருந்த சுமார் 80 சவரன் நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூபாய் 5லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றை முகமூடி அணிந்து வந்த நான்கு கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் குறித்து காஞ்சி தாலுக்கா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சம்பந்தப்பட்ட பெண்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சம்பவம் நடைபெற்ற பொழுது, இருவர் சீரியல் பார்த்து கொண்டிருந்ததாகவும், ஒருவர் உணவு சமைத்துக் கொண்டிருந்ததாகம் விசாரணையில் தெரிவித்தனர். கதவை மூடாமல் இருந்ததால் திருடர்கள் சுலபமாக வீட்டிற்குள் நுழைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | காவல் உதவி ஆய்வாளர் மீது கார் மோதி விட்டு தப்பி ஓடிய பிரபல சாராய வியாபாரி!

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த பகுதியில் கடந்த சில மணி நேரத்திற்கு முன்பு சந்தேகத்துக்கிடமான வகையில் இருவர் அந்த வீட்டின் அருகே நோட்டமிட்டது காவல்துறையினர் உறுதிப்படுத்தி உள்ளனர் அந்த சிசிடிவி காட்சிகளை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட இருவரும் யார் என்பது குறித்து தற்போது காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News