பொதுமக்கள் தேவைக்காக பேருந்துகளை அதிகரிக்க வேண்டும் -ஸ்டாலின்...

மார்ச் 24 முதல் அமலுக்கு வரும் ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் மக்கள் கூட்டத்தால் திகைத்துள்ளது.

Last Updated : Mar 23, 2020, 11:58 PM IST
பொதுமக்கள் தேவைக்காக பேருந்துகளை அதிகரிக்க வேண்டும் -ஸ்டாலின்... title=

மார்ச் 24 முதல் அமலுக்கு வரும் ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் மக்கள் கூட்டத்தால் திகைத்துள்ளது.

செவ்வாய்க்கிழமை 6 மணி முதல் மார்ச் 31 வரை தடைசெய்யப்பட்ட உத்தரவுகள் மாநிலத்திலும், மாநிலங்களுக்கிடையில் அல்லது உள் மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து உள்பட இயல்பு நிலைக்கு தடை விதிக்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்த நிலையில், கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் மக்கள் கூட்டத்தால் அலை மோதியதூ. கொரோனா அச்சம் காரணமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்க முயற்சி செய்த மக்களின் நெரிசல் காரணமாக பேருந்து நிலையம் போர் களமாக உருமாறியது.

முன்னாதக மாநிலத்தில் கொரோனா தொற்று பரவுதலை தடுக்கும் முயற்சியாக அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களைத் தவிர மற்ற அனைத்து அமைப்புகளையும் மூடுவதாகவும் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இதனையடுத்து மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு பயணிக்க முயற்சித்து வருகின்றனர். 

நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவையை மத்திய அரசு நிறுத்தியுள்ளது, இதன் விளைவாக பஸ் இருக்கைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதேபோல் மளிகை கடைகளில் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் பீதியில் பொருட்களை வாங்கி குவிக்க துவங்கியுள்ளனர். சில சில்லறை விற்பனை நிலையங்கள் காய்கறிகளுக்கும் பழங்களுக்கும் தேவை அதிகமாக இருக்கும் நீண்ட வரிசைகளைக் கண்டுள்ளன.

இதனிடையே., மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் உடனடியாக பேருந்துகளை அதிகப்படுத்த வேண்டும் என திமுக முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடுகையில்., கொரோனா வைரஸ் அச்சம், அரசு அறிவித்துள்ள 144 தடை ஆகியவை இருக்கும், இச்சூழலில் வெளியூர் செல்லும் மக்களுக்கு போதுமான பேருந்து ஏற்பாடுகளைச் செய்து தராமல் அவர்களை சாலையில் நிறுத்தி சண்டையிட வைத்திருக்கிறது அரசு.

பேருந்துகளைக் குறைத்துவிட்டால் மக்கள் எப்படி தங்கள் ஊருக்குச் செல்வார்கள் என்ற குறைந்தபட்ச எண்ணம் கூடவா அரசுக்கு இல்லை? உடனடியாக பேருந்துகளை அதிகப்படுத்த வேண்டும். கட்டணம் இல்லாமல் இலவசமாக அவர்களுக்கு போக்குவரத்து வசதி செய்து தரப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Trending News