கொடநாடு பிரச்னையை சட்டப்படி சந்திக்க தயார் - பழனிசாமி!

கொடநாடு கொள்ளை, கொலை சம்பவங்களில் தனது பெயரை இழுத்து திமுக சதி செய்கிறது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!

Last Updated : Jan 19, 2019, 12:38 AM IST
கொடநாடு பிரச்னையை சட்டப்படி சந்திக்க தயார் - பழனிசாமி! title=

கொடநாடு கொள்ளை, கொலை சம்பவங்களில் தனது பெயரை இழுத்து திமுக சதி செய்கிறது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடைபெற்ற மர்ம சம்பவங்கள் குறித்து தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மாத்தியூ ஆவணப்படம் ஒன்றினை வெளியிட்டார். கொடநாடு கொள்ளை, கொலை சம்பவத்தில் ஈடுப்பட்ட குற்றவாளிகள் இந்த வீடியாவில் வாக்குமூலம் அளித்திருந்தனர், இதன் காரணமாக தமிழக அரசியலில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

காரணம் இந்த வீடியோவில் வாக்குமூலம் அளித்திருந்த சயன், மனோஜ் ஆகியோர் கொடநாடு கொள்ளை சம்பவத்திற்கு காரணம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் என தெரிவித்திருந்தனர். எனினும் இதற்கு எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றார்.

 இந்நிலையில் இதுகுறித்து பூந்தமல்லியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்., எதிர்கட்சியான திமுக தான் சாமுவேல் மாத்தியூவை பின்னணியில் இருந்து இயக்கி வருகிறது என குற்றம்சாட்டினார். 

மேலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தன் மீது சுமத்தியுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்ட சயான் மற்றும் மனோஜை, திமுக ஜாமீனில் எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர்., கொடநாடு பிரச்னையை சட்டப்படி சந்திக்க தயார் எனவும், தான் 7 முறை சிறைக்கு சென்றவன் - பொய் குற்றச்சாட்டுகளுக்கு பயப்படப் போவதில்லை எனவும் குறிப்பிட்டு பேசினார்.

Trending News