யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது: கடுப்பான எடப்பாடி பழனிச்சாமி

திமுக ஆட்சிக்கு வந்து பதினோரு மாதம் நிறைவடையும் நிலையில் தற்போது வரை எந்த புதிய திட்டங்களையும் செய்யவில்லை என்ற அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 2, 2022, 10:03 AM IST
  • அதிமுகவின் திட்டங்கள்
  • கடுப்பான எடப்பாடி பழனிசாமி
  • கள்ளக்குறிச்சியில் அதிமுக சார்பில் நடைபெற்ற மே தின விழா
யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது: கடுப்பான எடப்பாடி பழனிச்சாமி title=

திமுக ஆட்சிக்கு வந்து பதினோரு மாதம் நிறைவடையும் நிலையில் தற்போது வரை எந்த புதிய திட்டங்களையும் செய்யவில்லை என்ற அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் அதிமுக சார்பில் நடைபெற்ற மே தின விழா கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில்:- 

மேலும் படிக்க | சீர்காழி அருகே அரசு பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்து! 

திமுக ஆட்சிக்கு வந்து பதினோரு மாதம் நிறைவடையும் நிலையில் எவ்வித திட்டங்களையும் செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவையும் கட்டிமுடிக்கப்பட்ட பணிகளுக்கு திறப்பு விழாவை மட்டுமே முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்தபின் மின்வெட்டு அதிகரித்துள்ளது விவசாயிகள் தொழிலாளர்கள் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மின்வெட்டு வரும் என நாங்கள் பலமுறை எச்சரித்தும் திமுக அரசு சரியான முறையில் நடவடிக்கை மேற்கொள்ளாததால் தற்பொழுது மின் வெட்டு காரணமாக விவசாயிகள் வேளாண் பணிகளை நிறைவேற்ற முடியவில்லை தொழிற்சாலைகள் சரியாக செயல்படாததால் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என குற்றச்சாட்டினார். 

கடந்த பத்தாண்டு காலமாக வெளிநாடுகள் மூலமாக கொள்ளையடித்த பணத்தை கொண்டு வருவதற்காக ஸ்டாலின் வெளிநாடு சென்றார். சட்டமன்றத்தில் இன்று மருத்துவ சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என 11 மருத்துவக்கல்லூரிகள் கொண்டு வந்ததாக அப்பட்டமாக பொய் சொல்கிறார். 

அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசிடம் பேசி 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்தோம். இன்னமும் சொல்லப்போனால் கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கி மருத்துவ கல்லூரி கொண்டு வந்ததே அதிமுக தான். திமுக தலைவர் கருணாநிதி உயிரோட இருக்கும்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியாக பிரிக்கப்படவில்லை ஆனால் கருணாநிதி கூறியதை போல் திமுக மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்ததாக அப்பட்டமாக பொய் சொல்கின்றனர். யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது எனவும் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

மேலும் படிக்க | ஜெய் பீம் பட பாணியில் கொல்லப்பட்டாரா ‘தங்கமணி’ - சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த மு.க.ஸ்டாலின் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News