இறந்துபோனவர் வீட்டுக்கு வந்ததால் மகிழ்ச்சி! அப்ப அடக்கம் பண்ணியது யார ?

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகேயுள்ள துறையம்பாளையம் கிராமத்தில் இறந்து போனதாக அடக்கம் செய்யப்பட்டவர் உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Apr 5, 2022, 01:25 PM IST
  • அடக்கம் செய்யப்பட்டவர் வீட்டுக்கு வந்ததால் அதிர்ச்சி
  • தான் இறக்கவே இல்லை என்று அறிவித்த முதியவர்
  • அப்ப அடக்கம் பண்ணியது யாரை ?
இறந்துபோனவர் வீட்டுக்கு வந்ததால் மகிழ்ச்சி! அப்ப அடக்கம் பண்ணியது யார ? title=

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள புஞ்சை துறையம்பாளையத்தை சேர்ந்த மூர்த்தி என்பவர் கரும்பு வெட்டி கூலி வேலை செய்து வருபவர். பல்வேறு இடங்களுக்கு கரும்பு வெட்டும் வேலைக்கு, மூர்த்தி செல்வது வழக்கம். உள்ளூர் மட்டுமல்லாமல் ஈரோடு மாவட்டத்தில் எங்கு வேண்டுமானாலும் வேலைக்குச் செல்வார். கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் கரும்பு வெட்டுவதற்காக மூர்த்தி சென்று வருகிறார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் கரும்பு வெட்டும் வேலைக்குச் சென்ற மூர்த்தி, பின்னர் வீடு திரும்பவில்லை. 

மேலும் படிக்க | உயிருடன் இருப்பதற்கு சான்று கேட்ட வங்கி..ஆவணங்களைத் தேடி அலையும் முதியவர்!

இதனால் மூர்த்தியின் மகன்கன் கார்த்தி மற்றும் பிரபுகுமார் ஆகியோர் பல இடங்களில் தந்தையை தேடியுள்ளனர். ஆனால் மூர்த்தி கிடைக்கவேயில்லை. ஆனாலும் தந்தையை தேடும் பணியை மட்டும் மகன்கள் விடவில்லை. இந்நிலையில் கடந்த 31-ஆம் தேதி சத்தியமங்கலம் பேருந்து நிலைய பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக கார்த்திக்கிற்கு  வாட்ஸ் அப்பில் தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக சத்தியமங்கலம் சென்ற கார்த்திக், சடலத்தைக் கண்டார். முகம் அழுகிய நிலையில் இருந்ததால் யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும், உடல் தோற்றத்தை வைத்து தனது தந்தைதான் என முடிவு செய்தார். பின் சடலத்தை எடுத்துக்கொண்டு துறையம்பாளையம் கொண்டு சென்ற கார்த்திக், உரிய முறைப்படி சடங்குகள் செய்து அடக்கம் செய்தார். இந்நிலையில், அடக்கம் செய்யப்பட்ட மூர்த்தி, சிறிது நாட்களுக்குப் பிறகு திடீரென வீட்டிற்கு வந்ததால் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். 

மேலும் படிக்க | இந்தியாவுக்கு இலங்கை சொல்லும் ‘ரகசியம்’ என்ன ?

ஆனாலும், இறந்து போனதாக கூறி அடக்கம் செய்யப்பட்ட மூர்த்தி உயிருடன் வந்ததால் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். இதையடுத்து, போலீஸாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பங்களாப்புதூர் போலீசார் மூர்த்தி இதுநாள் வரை எங்கிருந்தார் என்ற விவரங்களை சேகரித்து, குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தினர். அப்படியானால் அடக்கம் செய்யப்பட்ட அந்த நபர் யாரென்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் துறையம்பாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடக்கம் செய்யப்பட்டதாக கூறிய மூர்த்தி, உயிருடன் வந்ததால் கிராமத்தில் உள்ள பலரும் மூர்த்தியை வந்து சந்தித்துவிட்டுச் செல்கின்றனர்.  

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News