வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 4 பலி

Last Updated : May 8, 2017, 08:24 AM IST
வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 4 பலி title=

வடபழனியில் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் முதல்தளத்தில் வசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேருக்கு மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சென்னையில் உள்ள வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை திடிரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் தீ பற்றியுள்ளது. 

இந்த சம்பவத்தை அடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் 20 இருசக்கர வாகனங்கள் கருகின. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கீழ் தளத்தில் அச்சகத்தில் மின்கசிவு காரணமாக தீ பிடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Trending News